ஒரே நேரத்தில் இரண்டு படங்களில் நடிக்கும் அஜித் குமார்! | சமுத்திரகனிக்கு பெரிய மனது: நெகிழ்ந்த பாலா | ராகவா லாரன்ஸின் ‛மாற்றம்' அமைப்பில் இணைந்த எஸ்.ஜே.சூர்யா! | விஜய் - அஜித்தை தொடர்ந்து விஜய் சேதுபதி படங்களும் ரீ ரிலீஸ் ஆகிறது! | பாடல் இல்லாத படத்துக்கு இசையமைக்கும் அனிருத்! | மகாதேவ் சூதாட்ட செயலி வழக்கு: நடிகர் சாஹில் கான் கைது | விஜயகாந்த்க்கு மே 9ல் பத்ம பூஷன் விருது: பிரேமலதா தகவல் | முத்தக்காட்சிகளால் படங்களை இழந்தேன்: மிருணாள் தாக்கூர் | ஹிந்திக்கு செல்லும் தில் ராஜூ! | ரன்வீர் சிங்கை இயக்கும் ஹனுமான் பட இயக்குனர்! |
டார்லிங் படத்திற்கு பிறகு ஜி.வி.பிரகாஷ் நடித்து வெளியான படம் திரிஷா இல்லன்னா நயன்தாரா. ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கிய இந்த படம் ஆரம்பத்தில் பெண்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியபோதும், இளைஞர் பட்டாளம் அந்த படத்தை சூப்பர் ஹிட்டாக்கியது. அதன்காரணமாக ஜி.வி.பிரகாஷின் மார்க்கெட்டும் எகிறிது. அதையடுத்து எனக்கு இன்னொரு பேர் இருக்கு, புரூஸ்லி, கடவுள் இருக்கான் குமாரு, கெட்ட பையன்டா இந்த கார்த்திக் என பல படங்க ளில் கமிட்டானார். இதுதவிர மேலும் சில படங்களில் நடிக்கவும் கதை கேட்டிருக்கிறார். அந்த வகையில், விஜயசேதுபதிக்கு பிறகு அதிக படங்களில் நடிக் கும் நடிகராகியிருக்கிறார் ஜி.வி.பிரகாஷ்.
இந்த நிலையில், திரிஷா இல்லன்னா நயன்தாரா படத்தை இயக்கிய ஆதிக் ரவிச்சந்திரன், அதையடுத்து சிம்பு நடிப்பில் ‛அன்பானவன் அசராதவன் அடங்காதவன்' என்ற படத்தை இயக்கும் முயற்சியில் தற்போது ஈடுபட்டுள்ளார். அதையடுத்து அவர் திரிஷா இல்லன்னா நயன்தாரா படத்தின் இரண்டாம் பாகத்தை இயக்குகிறாராம். சமீபத்தில் அவரும், ஜி.வி.பிரகாசும் சந்தித்தபோது அந்த படத்திற்கான கதையையும் முடிவு செய்து விட்டார்களாம். அதனால் சிம்புவின் டிரிபுள் ஏ படப்பிடிப்பு முடிந்ததும், ஜி.வி.பிரகாஷின் திரிஷா இல்லன்னா நயன்தாரா படத்தின் 2-ஆம் பாகத்தையும் தொடங்குகிறாராம் ஆதிக் ரவிச்சந்திரன்.