ஒரே நேரத்தில் இரண்டு படங்களில் நடிக்கும் அஜித் குமார்! | சமுத்திரகனிக்கு பெரிய மனது: நெகிழ்ந்த பாலா | ராகவா லாரன்ஸின் ‛மாற்றம்' அமைப்பில் இணைந்த எஸ்.ஜே.சூர்யா! | விஜய் - அஜித்தை தொடர்ந்து விஜய் சேதுபதி படங்களும் ரீ ரிலீஸ் ஆகிறது! | பாடல் இல்லாத படத்துக்கு இசையமைக்கும் அனிருத்! | மகாதேவ் சூதாட்ட செயலி வழக்கு: நடிகர் சாஹில் கான் கைது | விஜயகாந்த்க்கு மே 9ல் பத்ம பூஷன் விருது: பிரேமலதா தகவல் | முத்தக்காட்சிகளால் படங்களை இழந்தேன்: மிருணாள் தாக்கூர் | ஹிந்திக்கு செல்லும் தில் ராஜூ! | ரன்வீர் சிங்கை இயக்கும் ஹனுமான் பட இயக்குனர்! |
அஜீத் நடித்த வீரம், வேதாளம் படங்களை இயக்கிய சிவாவே அவரது 57-வது படத்தையும் சத்யஜோதி பிலிம்சுக்காக இயக்குகிறார் என்பது ஏற்கனவே வெளியான செய்திதான். அதேபோல் அந்த படத்தில் நாயகியாக நடிப்பது அவரா? இவரா? என்று அனுஷ்கா, நயன்தாரா, தமன்னா உள்ளிட்ட சில நடிகைகளின் பெயர்களும் யூகங்கள் அடிப்படையில் ஓடிக்கொண்டிருக்கிறது. இந்த நிலையில், தற்போது அஜீத் படத்தில் வில்லன்களாக நடிக்கும் நடிகர்களைப்பற்றிய செய்திகள் கோலிவுட்டில் கசியத் தொடங்கியிருக்கிறது.
அதாவது, பாலாவின் தாரைத்தப்பட்டை படத்தில் வில்லனாக நடித்த ஆர்.கே. சுரேஷ் அஜீத் படத்தில் வில்லனாக நடிப்பதாக செய்திகள் பரவி வரும் நிலையில், தற்போது நாயகன் சசிகுமார் முக்கிய வில்லனாக நடிப்பதாக இன்னொரு பரபரப்பு செய்தி பரவியுள்ளது. சுப்ரமணியபுரம் படத்தை இயக்கி நடித்த சசிகுமார், இப்போது வரை நாயகனாகத்தான் நடித்து வருகிறார். அதனால் தற்போது இந்த செய்தி பரவியிருப்பது எந்த அளவுக்கு உண்மை என்று தெரியவில்லை. மேலும், சமீபகாலமாக அரவிந்த்சாமி, அருண்குமார் என சில ஹீரோக்கள் வில் லன்களாக நடித்து வரும் நிலையில்,சசிகுமாரும் ஒரு சேஞ்சுக்காக வில்லனாக நடித்தாலும் ஆச்சர்யப்படுவதற்கில்லை