ஒரே நேரத்தில் இரண்டு படங்களில் நடிக்கும் அஜித் குமார்! | சமுத்திரகனிக்கு பெரிய மனது: நெகிழ்ந்த பாலா | ராகவா லாரன்ஸின் ‛மாற்றம்' அமைப்பில் இணைந்த எஸ்.ஜே.சூர்யா! | விஜய் - அஜித்தை தொடர்ந்து விஜய் சேதுபதி படங்களும் ரீ ரிலீஸ் ஆகிறது! | பாடல் இல்லாத படத்துக்கு இசையமைக்கும் அனிருத்! | மகாதேவ் சூதாட்ட செயலி வழக்கு: நடிகர் சாஹில் கான் கைது | விஜயகாந்த்க்கு மே 9ல் பத்ம பூஷன் விருது: பிரேமலதா தகவல் | முத்தக்காட்சிகளால் படங்களை இழந்தேன்: மிருணாள் தாக்கூர் | ஹிந்திக்கு செல்லும் தில் ராஜூ! | ரன்வீர் சிங்கை இயக்கும் ஹனுமான் பட இயக்குனர்! |
'குருவி' படத்தில் விஜய்யின் தங்கையாகவும், 'ராஜாதிராஜா' படத்தில் பள்ளி மாணவியாகவும் நடித்து 'போராளி' படத்தின் மூலம் ஹீரோயினாக அறிமுகமானவர் நிவேதா தாமஸ். அதன் பிறகு நவீன சரஸ்வதி சபதம் படத்தில் நடித்தார். பாபநாசம் படத்தில் கமலின் மகளாக நடித்த பிறகு அவரின் மார்க்கெட் உயர்ந்தது. ஆனாலும் அவர் தொடர்ந்து நடிக்கவில்லை. தற்போது அவர் தெலுங்கில் நானியுடன் நடித்த 'ஜெண்டில்மேன்' படம் கடந்த வாரம் வெளியாகி வெற்றி பெற்றுள்ளது. நடிப்புக்கு இடைவெளி விட்டது ஏன் என்பதற்கு அவர் அளித்த பதில்.
'பாபநாசம்' படத்திற்கு பிறகு நிறைய படங்கள் வந்தது. அதில் வலுவான கதைகள் இல்லை. சில நல்ல கதைகளாக இருந்தாலும் தங்கை கேரக்டராக இருந்தது, அதனால் நடிக்கவில்லை. தெலுங்கிலும், மலையாளத்திலும் ஹீரோயினாக நடிக்கும்போது தமிழில் மட்டும் ஏன் மற்ற கேரக்டரில் நடிக்க வேண்டும். 'பாபநாசம்' படம் தனி அதனை மற்ற படங்களோடு ஒப்பிட முடியாது.
அதோடு நான் தற்போது ஆர்கிடெக்ட் படித்து வருகிறேன். ஒரு வருட படிப்பு முடிந்திருக்கிறது. இன்னும் இரண்டு ஆண்டுகள் படிப்பு பாக்கி இருக்கிறது. அதனால் சினிமாவுக்கு நேரம் ஒதுக்க முடியவில்லை. 'ஜெண்டில்மேன்' மாதிரி படங்கள் அமைந்தால் நடிப்பேன். இல்லாவிட்டால் படிப்பை தொடர்வேன். என்கிறார் நிவேதா தாமஸ்.