ஏஆர் முருகதாஸை புகழ்ந்து பேசிய ஆமிர்கான் | மதுரை, கல்லம்பட்டி-யில் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு | 'ஸ்டார்' படத்திற்கு எதிர்பாராத வியாபாரம்? | சமந்தா எத்தனை கார்கள் வைத்துள்ளார் தெரியுமா? | ஒரே நேரத்தில் இரண்டு படங்களில் நடிக்கும் அஜித் குமார்! | சமுத்திரகனிக்கு பெரிய மனது: நெகிழ்ந்த பாலா | ராகவா லாரன்ஸின் ‛மாற்றம்' அமைப்பில் இணைந்த எஸ்.ஜே.சூர்யா! | விஜய் - அஜித்தை தொடர்ந்து விஜய் சேதுபதி படங்களும் ரீ ரிலீஸ் ஆகிறது! | பாடல் இல்லாத படத்துக்கு இசையமைக்கும் அனிருத்! | மகாதேவ் சூதாட்ட செயலி வழக்கு: நடிகர் சாஹில் கான் கைது |
நடிப்பு ஆசையால் ஆந்திராவில் இருந்து சென்னை வந்தவர் சாவித்ரி. அவர் நினைத்த மாதிரி சினிமா இல்லை. வசனமே இல்லாத சிறு சிறு வேடங்கள் தான் கிடைத்தது. இருந்தாலும் வருமானம் வேண்டுமே என்ற நடித்து வந்தார். ஒரு புதிய படத்திற்கு நடிக்க ஆள் தேர்வு செய்கிறார்கள் என்று கேள்விப்பட்டு ஜெமினி ஸ்டூடியோவுக்குச் சென்றார். “இந்த மூஞ்சிய வச்சிக்கிட்டு நடிக்க வந்தியாக்கும்” என்று சொல்லி விரட்டிவிட்டார் ஸ்டூடியோ மானேஜர். அவர்தான் பின்னாளில் சாவித்திரியின் காதல் கணவராக அமைந்த ஜெமினி கணேசன்.
சில ஆண்டுகளுக்கு பிறகு எல்.வி.பிரசாத் இயக்க இருந்த படத்தில் இரண்டாவது ஹீரோயின் வேடம் கிடைத்தது. அதில் ஹீரோயினாக இன்னொரு நடிகை நடிப்பதாக இருந்தது. முதல் நாள் படப்பிடிப்பில் அந்த நடிகைக்கு நடிப்பு வரவில்லை என்று எல்.வி.பிரசாத் திட்ட அவரும் கோபித்துக் கொண்டு சென்று விட்டார். இதனால் படப்பிடிப்பு தடை பட்டது. அடுத்து ஹீரோயின் கொண்டு வர காலதாமதம் ஆகும். படப்பிடிப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்து. இதனால் எல்.வி.பிரசாத்தும் இரண்டாவது நாயகியா ஒப்பந்தம் செய்யப்பட்டிருந்த சாவித்ரியை கூப்பிட்டு அந்த நடிகை நடிக்க சிரமப்பட்ட காட்சியை சாவித்ரியை நடித்து காட்டச் சொன்னார். நடிப்பு பசியில் இருந்த சாவித்திரி அந்த காட்சியில் பிச்சு உதறினார். “நீதான் இந்த படத்தின் ஹீரோயின்” என்று அறிவித்தார். அந்த படம்தான் மிஸ்சியம்மா.
சாவித்ரி என்ற நடிகையர் திகலத்தை அடையாளம் காட்டிய படம். “உனக்கெல்லம் நடிப்பு ஒரு கேடா” என்று அவரை ஜெமினி ஸ்டூடியோவில் இருந்து விரட்டிய ஜெமினி கணேசன்தான் ஹீரோ. சாவித்ரியின் நடிப்புக்காகவே படம் வெள்ளிவிழா கொண்டாடியது.