ஒரே நேரத்தில் இரண்டு படங்களில் நடிக்கும் அஜித் குமார்! | சமுத்திரகனிக்கு பெரிய மனது: நெகிழ்ந்த பாலா | ராகவா லாரன்ஸின் ‛மாற்றம்' அமைப்பில் இணைந்த எஸ்.ஜே.சூர்யா! | விஜய் - அஜித்தை தொடர்ந்து விஜய் சேதுபதி படங்களும் ரீ ரிலீஸ் ஆகிறது! | பாடல் இல்லாத படத்துக்கு இசையமைக்கும் அனிருத்! | மகாதேவ் சூதாட்ட செயலி வழக்கு: நடிகர் சாஹில் கான் கைது | விஜயகாந்த்க்கு மே 9ல் பத்ம பூஷன் விருது: பிரேமலதா தகவல் | முத்தக்காட்சிகளால் படங்களை இழந்தேன்: மிருணாள் தாக்கூர் | ஹிந்திக்கு செல்லும் தில் ராஜூ! | ரன்வீர் சிங்கை இயக்கும் ஹனுமான் பட இயக்குனர்! |
அரண்மனை-2வில் பேயாக நடித்த திரிஷா, இப்போது நாயகி படத்திலும் பேய் வேடத்தில் நடித்துள்ளார். தமிழ், தெலுங்கில் உருவாகியுள்ள அந்த படம் ரிலீசுக்கு தயாராகி விட்டது. அதையடுத்து கொடி படத்தில் தனுசுடன் நடித்துள்ள அவர், அடுத்தபடியாக கதையின் நாயகியாக நடிப்பதற்கு முதலிடம் கொடுக்கத் தொடங்கிவிட்டார். அப்படி பல கதைகளை கேட்ட திரிஷா, மாதேஷ் சொன்ன மோகினி படத்தின் கதை தன்னை கவர்ந்து விட இப்போது அந்த படத்தில் நடித்து வருகிறார். அதோடு, இப்படத்திற்காக பெரிய அளவில் பப்ளிசிட்டிகளை முடுக்கி விட திட்டமிட்டிருப்பதால் திரிஷாவின் மார்க்கெட் பரபரப்படையும் என்று தெரிகிறது.
மேலும், மோகினி என்றொரு படத்தில் திரிஷா நடிக்க, மாயமோகினி என்றொரு படமும் தற்போது ரிலீசுக்கு தயாராகிக்கொண்டிருக்கிறது. குஷ்புவின் தம்பி அப்துல்லா நாயகனாக நடித்துள்ள அந்த படத்தில் நிராயுதம் சாரிகா நாயகியாக நடித்துள்ளார். இதுவும் திரிஷாவின் மோகினி படம் போன்று ஹாரர் கதையில்தான் தயாராகியுள்ளது. ஆனால், வாலு என்ற டைட்டீலை ஒரு படத்துக்கு வைத்த பிறகு ரெட்டைவாலு என்று இன்னொரு படத்திற்கு டைட்டீல் வைத்தால் பிரச்சினை வரும் முன்பு அந்த மாதிரியான தலைப்புகளுக்கு தடை விதிக்கப்பட்டு வந்தது. ஆனால் இப்போது மறுபடியும் மாயமோகினி, மோகினி என்று டைட்டீல்களில் படங்கள் வரத்தொடங்கி விட்டன.