ஒரே நேரத்தில் இரண்டு படங்களில் நடிக்கும் அஜித் குமார்! | சமுத்திரகனிக்கு பெரிய மனது: நெகிழ்ந்த பாலா | ராகவா லாரன்ஸின் ‛மாற்றம்' அமைப்பில் இணைந்த எஸ்.ஜே.சூர்யா! | விஜய் - அஜித்தை தொடர்ந்து விஜய் சேதுபதி படங்களும் ரீ ரிலீஸ் ஆகிறது! | பாடல் இல்லாத படத்துக்கு இசையமைக்கும் அனிருத்! | மகாதேவ் சூதாட்ட செயலி வழக்கு: நடிகர் சாஹில் கான் கைது | விஜயகாந்த்க்கு மே 9ல் பத்ம பூஷன் விருது: பிரேமலதா தகவல் | முத்தக்காட்சிகளால் படங்களை இழந்தேன்: மிருணாள் தாக்கூர் | ஹிந்திக்கு செல்லும் தில் ராஜூ! | ரன்வீர் சிங்கை இயக்கும் ஹனுமான் பட இயக்குனர்! |
காதல் கிசுகிசுக்களிலிருந்து எந்த ஹீரோவும், எந்த ஹீரோவும் தப்பியதில்லை. சிலருக்கு காதல் கிசுகிசு ஒருவருடனே முடிந்து, அவர்களுடனே திருமணமும் நடந்துவிடும். சிலருக்கு கிசுகிசுவாக மட்டுமே முடிந்து விடும். சிலருக்கோ அந்த கிசுகிசு ஆள் மாறி மாறி தொடர்ந்து கொண்டேயிருக்கும். கடந்த சில வருடங்களாகவே காதல் கிசுகிசுவில் அதிகம் இடம் பெற்றவர் நயன்தாரா. அதற்கடுத்த இடத்தில் இருப்பவர் அஞ்சலி.
சில வருடங்களுக்கு முன்பு அவருடைய சித்தியுடன் ஏற்பட்ட தகராறால் சென்னையை விட்டு விலகி ஹைதராபாத்தில் தஞ்சமடைந்தார். அஞ்சலி சினிமாவில் நடிக்க ஆரம்பித்த போது, அவருக்கும் ஒரு இயக்குனருக்கும் காதல் என்று செய்தி பரவியது. அவர் கொஞ்சம் முன்னணிக்கு வந்த போது அவருக்கும் ஒரு தயாரிப்பாளருக்கும் காதல் என்று செய்தி பரபரப்பாகப் பேசப்பட்டது. ஹைதராபாத்திற்குச் சென்ற பிறகும் அஞ்சலிக்கும் அமெரிக்காவைச் சேர்ந்த ஒருவருக்கும் காதல் என்று செய்தி பரவியது.
தற்போது அஞ்சலிக்கும், நடிகர் ஜெய்க்கும் காதல் என மீண்டும் காதல் கிசுகிசு பரவி வருகிறது. அஞ்சலியின் பிறந்த நாள் இரண்டு நாட்களுக்கு முன்பு வந்த போது நடிகர் ஜெய், “இனிய பிறந்த நாள் வாழ்த்துகள் அஞ்சு” என்று செல்லமாக அவருக்கு வாழ்த்து தெரிவித்திருந்தார். பதிலுக்கு அஞ்சலியும், “நன்றி ஜெ...இதுதான் என்னுடைய சிறந்த மற்றும் மிக மகிழ்ச்சியான பிறந்த நாள், என்னுடன் எப்போதும் இரு,” என்று தெரிவித்துள்ளார். இந்த இரண்டு வார்த்தைப் பரிமாற்றங்களும் டிவிட்டரில் அனைவருக்கும் தெரியும்படி மீண்டும் நடந்திருப்பதுதான் அஞ்சலி, ஜெய் காதல் பற்றிய அடுத்த கிசுகிசு வரக் காரணமாமக அமைந்துள்ளது.