ஒரே நேரத்தில் இரண்டு படங்களில் நடிக்கும் அஜித் குமார்! | சமுத்திரகனிக்கு பெரிய மனது: நெகிழ்ந்த பாலா | ராகவா லாரன்ஸின் ‛மாற்றம்' அமைப்பில் இணைந்த எஸ்.ஜே.சூர்யா! | விஜய் - அஜித்தை தொடர்ந்து விஜய் சேதுபதி படங்களும் ரீ ரிலீஸ் ஆகிறது! | பாடல் இல்லாத படத்துக்கு இசையமைக்கும் அனிருத்! | மகாதேவ் சூதாட்ட செயலி வழக்கு: நடிகர் சாஹில் கான் கைது | விஜயகாந்த்க்கு மே 9ல் பத்ம பூஷன் விருது: பிரேமலதா தகவல் | முத்தக்காட்சிகளால் படங்களை இழந்தேன்: மிருணாள் தாக்கூர் | ஹிந்திக்கு செல்லும் தில் ராஜூ! | ரன்வீர் சிங்கை இயக்கும் ஹனுமான் பட இயக்குனர்! |
சமீபகாலமாக தமிழ், தெலுங்கு என இரண்டு மொழிகளிலும் முன்னணி நடிகையாக திகழ்பவர் சமந்தா. இவரெல்லாம் கவர்ச்சியில் தாக்குப்பிடிக்க மாட்டார் என்று நினைத்துக்கொண்டிருந்த நேரத்தில் அஞ்சானில் ஏனைய நடிகைகளை யெல்லாம் அஞ்ச வைக்கும் வகையில் அதிரடி கவர்ச்சி நடிகையாகவும் உருவெடுத்த சமந்தா, ஹோம்லி, கிளாமர் இரண்டுவிதமான கதாபாத்திரங்களுக்கும் ஏற்ற நடிகையாக வலம் வருகிறார்.
மேலும், தற்போது அவரது கவனம் நயன்தாரா, திரிஷாவைப்போன்று கதாநாயகியை முன்னிறுத்தும் கதைகள் பக்கம் திரும்பியுள்ளது. குறிப்பாக ஹாரர் கதைகளில் நடிக்க தான் ஆர்வமாக இருப்பதாக வெளிப்படையாக கூறி வரும் சமந்தா, சில பேய் பட டைரக்டர்களிடம் வாய்ப்பும் கேட்டு வருகிறார்.
இப்படி சினிமாவில அடுத்த லெவலுக்கு செல்ல முயற்சித்து வரும் சமந்தா, சினிமா போக மீதமுள்ள நேரத்தை சமூக சேவைக்கு அர்ப்பணித்து வருகிறார். ஐதராபாத்திலுள்ள பிரத்யுஷா என்ற சமூக சேவை அமைப்புடன் இணைந்து செயல்பட்டு வரும் சமந்தா, விரைவில் கலைநிகழ்ச்சிகள் நடத்தி அது மூலம் வரும் தொகையை சமூக சேவைகளுக்காக வழங்கப்பேகிறாராம். இப்படி தன்னால் ஆன உதவியை ஏழைகளுக்கு கொடுப்பது அவருக்கு பெரிய ஆத்ம திருப்தியை கொடுத்து வருகிறதாம்.