ஒரே நேரத்தில் இரண்டு படங்களில் நடிக்கும் அஜித் குமார்! | சமுத்திரகனிக்கு பெரிய மனது: நெகிழ்ந்த பாலா | ராகவா லாரன்ஸின் ‛மாற்றம்' அமைப்பில் இணைந்த எஸ்.ஜே.சூர்யா! | விஜய் - அஜித்தை தொடர்ந்து விஜய் சேதுபதி படங்களும் ரீ ரிலீஸ் ஆகிறது! | பாடல் இல்லாத படத்துக்கு இசையமைக்கும் அனிருத்! | மகாதேவ் சூதாட்ட செயலி வழக்கு: நடிகர் சாஹில் கான் கைது | விஜயகாந்த்க்கு மே 9ல் பத்ம பூஷன் விருது: பிரேமலதா தகவல் | முத்தக்காட்சிகளால் படங்களை இழந்தேன்: மிருணாள் தாக்கூர் | ஹிந்திக்கு செல்லும் தில் ராஜூ! | ரன்வீர் சிங்கை இயக்கும் ஹனுமான் பட இயக்குனர்! |
பழம்பெரும் இசை அமைப்பாளர் கோவர்த்தன் வறுமையில் வாடுகிற செய்தி வெளியானதை தொடர்ந்து தமிழக முதல்வர் ஜெயலிலிதா டாக்டர் எம்.ஜி.ஆர் அறக்கட்டளையிலிருந்து 10 லட்சம் ரூபாய் நிதி உதவி வழங்கினார். இதற்கு இசை அமைப்பாளரும், தமிழ்நாடு இயல் இசை நாடக மன்றத் தலைவருமான தேவா, இசை குடும்பத்தின் சார்பில் நன்றி தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கை வருமாறு:
இசையமைப்பாளர் கோவர்தன் மாஸ்டர் அவர்களுடைய வறுமை நிலையினை மனதில் கொண்டு தாயுள்ளத்தோடு, முதலமைச்சர் அவர்கள் ரூபாய் 10 லட்சம் நிதியுதவி வழங்கி இருப்பது மட்டற்ற மகிழ்ச்சி அளிக்கிறது. இதன் வாயிலாக முதலமைச்சர் அவர்கள் இசை குடும்பத்தினர் மீது எந்த அளவிற்கு கருணையும், பற்றுதலும் கொண்டுள்ளார்கள் என்பது தெளிவாகிறது. இந்த பேருதவி செய்ததற்கு ஒட்டுமொத்த இசைக் குடும்பங்களின் சார்பாக நெஞ்சார்ந்த நன்றியினை தெரிவித்துக் கொள்கிறோம்.
இயல், இசை,நாடகம், நாட்டியம் திரைப்படம் மற்றும் கிராமியக் கலைகள் என பல தரப்பட்ட கலைப் பிரிவுகளை சார்ந்த கலைஞர்களுக்கு, நலிந்த நிலையில் வாழும் புகழ் பெற்ற வயோதிக கலைஞர்களுக்கு மாதம் தோறும் நிதி உதவி வழங்குதல், மறைந்த கலைஞர்களின் குடும்பங்களை சார்ந்தவர்களுக்கு குடும்ப பராமரிப்பு உதவி தொகை வழங்குதல் இளம் கலைஞர்களை வெளி ஊருக்கு அறிமுகம் செய்யும் வண்ணம் அவர்களுக்கு கலை நிகழ்ச்சி வழங்கி ஊக்குவித்தல், புதிய நாடகங்கள், நாட்டிய நாடகங்கள் தயாரித்து மேடை ஏற்றம் செய்ய நிதி உதவி வழங்குதல். தொன்மை சிறப்புமிக்க கலை அம்சங்களை வருங்கால சந்ததியினர் அறிந்துகொள்ளும் வகையில் தெருக்கூத்து, இசை நாடகம் பொம்மலாட்டம், தோற்பாவை கூத்து போன்றவற்றை ஆவணப்படமாக்க எண்ணற்ற உதவிகளை செய்துவருகிறது. இவ்வாறு அந்த அறிக்கையில் தேவா கூறியுள்ளார்.