ஒரே நேரத்தில் இரண்டு படங்களில் நடிக்கும் அஜித் குமார்! | சமுத்திரகனிக்கு பெரிய மனது: நெகிழ்ந்த பாலா | ராகவா லாரன்ஸின் ‛மாற்றம்' அமைப்பில் இணைந்த எஸ்.ஜே.சூர்யா! | விஜய் - அஜித்தை தொடர்ந்து விஜய் சேதுபதி படங்களும் ரீ ரிலீஸ் ஆகிறது! | பாடல் இல்லாத படத்துக்கு இசையமைக்கும் அனிருத்! | மகாதேவ் சூதாட்ட செயலி வழக்கு: நடிகர் சாஹில் கான் கைது | விஜயகாந்த்க்கு மே 9ல் பத்ம பூஷன் விருது: பிரேமலதா தகவல் | முத்தக்காட்சிகளால் படங்களை இழந்தேன்: மிருணாள் தாக்கூர் | ஹிந்திக்கு செல்லும் தில் ராஜூ! | ரன்வீர் சிங்கை இயக்கும் ஹனுமான் பட இயக்குனர்! |
பெண்ணிடம் தகராறு செய்த வாலிபர் ஒருவரை நடிகர் சூர்யா கன்னத்தில் பளார் என்று அறைந்ததாக கூறப்படுகிறது. இது தொடர்பாக அந்த வாலிபர் போலீசில் புகார் செய்துள்ளார்.
சூர்யா நேற்று மாலை கிழக்கு கடற்கரை சாலையில் ஒரு படப்பிடிப்பில் கலந்து கொண்டு விட்டு திரும்பிக் கொண்டிருந்தார். அடையார் திரு.வி.க. மேல்பாலத்தில் வரும்போது ஒரு இளைஞன் ஒரு பெண்ணை மிரட்டும் தொணியில் பேசிக் கொண்டிருந்திருக்கிறார். எல்லோரும் அதனை வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தததால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது. இதனால் காரை விட்டு இறங்கிய சூர்யா அவர்களிடம் சென்று விசாரித்துள்ளார். அந்த பெண்ணின் காரில் அந்த இளைஞனின் மோட்டாள் சைக்கிள் மோதி இருக்கிறது.
இது தொடர்பாக இருவரும் ஒருவர் மீது ஒருவர் குற்றம்சாட்டி வாக்குவாதம் செய்து கொண்டிருந்துள்ளனர். இருவரையும் சூர்யா சமாதானப்படுத்தி அனுப்பி வைக்க முயற்சித்துள்ளார், அப்போது அந்த வாலிபர் சூர்யாவை பார்த்து தகாத வார்த்தைகள் பேசியுள்ளதாக கூறப்படுகிறது. இதனால் ஆத்திரம் அடைந்த சூர்யா அந்த இளைஞனின் கன்னத்தில் பளார் என்று அறைந்து விட்டு காரில் ஏறிச் சென்று விட்டதாக கூறப்படுகிறது.
சென்னை பிராட்வே பாரிமுனையை சேர்ந் பிரேம்குமார் என்ற அந்த இளைஞர் சூர்யா தன்னை தாக்கவிட்டதாகவும். அவமானம் தாங்காமல் நான் தற்கொலை செய்தால் அதற்கு சூர்யாதான் பொறுப்பு என்றும் சாஸ்திரி நகர் போலீசில் புகார் செய்துள்ளார். போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
சூர்யா தரப்பு மறுப்பு : இதுகுறித்து சூர்யா தரப்பில் விசாரித்தபோது அவர்கள் கூறியதாவது... சூர்யா அடையாறிலிருந்து வரும்போது இரண்டு இளைஞர்கள் மோட்டார் சைக்கிளில் அதிவேகமாக வந்து கொண்டிருந்தார்கள். சைலன்சரை சத்தமாக வைத்து கொண்டு அவர்கள் மற்றவர்களை பயமுறுத்தும் அளவிற்கு சென்று கொண்டிருந்தார்கள். ஒரு வயதான அம்மா மீது மோதிவிட்டு நிற்காமல் சென்றார்கள். அவர்களை வழிமறித்த சூர்யா அவர்களிடம் “இப்படி செய்வதால் பலருக்கு பாதிப்பு ஏற்படுகிறது. உங்கள் உயிருக்கும் ஆபத்து” என்று அறிவுரை சொன்னார். அவர்கள் அதை ஏற்கவில்லை. இதனால் போனில் போலீசுக்கு தகவல் தெரிவித்து தனது உதவியாளரை அங்கு நிறுத்திவிட்டு வந்து விட்டார். சூர்யா வந்ததும், அவர் மீது அந்த இளைஞர்கள் பொய்யான புகாரை கொடுத்துள்ளனர். என்கிறார்கள்.