ஒரே நேரத்தில் இரண்டு படங்களில் நடிக்கும் அஜித் குமார்! | சமுத்திரகனிக்கு பெரிய மனது: நெகிழ்ந்த பாலா | ராகவா லாரன்ஸின் ‛மாற்றம்' அமைப்பில் இணைந்த எஸ்.ஜே.சூர்யா! | விஜய் - அஜித்தை தொடர்ந்து விஜய் சேதுபதி படங்களும் ரீ ரிலீஸ் ஆகிறது! | பாடல் இல்லாத படத்துக்கு இசையமைக்கும் அனிருத்! | மகாதேவ் சூதாட்ட செயலி வழக்கு: நடிகர் சாஹில் கான் கைது | விஜயகாந்த்க்கு மே 9ல் பத்ம பூஷன் விருது: பிரேமலதா தகவல் | முத்தக்காட்சிகளால் படங்களை இழந்தேன்: மிருணாள் தாக்கூர் | ஹிந்திக்கு செல்லும் தில் ராஜூ! | ரன்வீர் சிங்கை இயக்கும் ஹனுமான் பட இயக்குனர்! |
கௌதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் சிம்பு, மஞ்சிமா மோகன் நடிக்க சில வருடங்களுக்கு முன் தொடங்கப்பட்ட படம் - 'அச்சம் என்பது மடமையடா'. சிம்பு நடித்த படம் குறித்த காலத்தில் முடிவடையாது வருடக்கணக்கில் இழுத்துக்கொண்டே போகும் என்று சொல்லப்படுவதற்கு ஏற்ப இந்தப்படமும் ஆமை வேகத்தில் வளர்ந்து வருகிறது.
இத்தனைக்கும் இந்தப் படத்துக்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கிறார். இப்படத்தின் 'தள்ளிப்போகாதே...' என்ற பாடல் ஏற்கெனவே வெளியாகியுள்ளது. அதனைத் தொடர்ந்து தற்போது 'ராசாளி...' என்ற பாடலையும் வெளியிட்டுள்ளார்கள். அந்தக்காலத்துப் பாடல்களின் மெட்டைக் கொண்டு, இப்பாடலுக்கு வித்தியாசமாக இசையமைத்துள்ளார் ஏ.ஆர்.ரஹ்மான்.
முத்தைத்தரு பத்தித் திருநகை, நின்னுக்கோரி வர்ணம் ஆகிய பாடல்களை காப்பியடித்தே ரஹ்மான் இப்பாடலை உருவாக்கியிருப்பதாக, ராசாளி பாடல் குறித்து சமூக வலைத்தளங்களில் விமர்சனம் செய்து வருகின்றனர். தன்னைப் பற்றி கடுமையான விமர்சனம் எழுவதைக் கண்ட ஏ.ஆர்.ரகுமான் இப்பாடல் குறித்து தன்னுடைய முழு விளக்கத்தையும் தனது அதிகாரபூர்வ ஃபேஸ்புக் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.
“அச்சம் என்பது மடமையடா திரைப்படத்துக்காக உருவாக்கிய ராசாளி பாடலில் ஆங்காங்கே ஒலிக்கும் மரபுசார் இசை மற்றும் வரிகள், கதையின் போக்கிற்கு உதவும் நோக்கில் இழைக்கப்பட்டிருக்கின்றன. அருணகிரிநாதரின் முத்தைத்தரு பத்தித் திருநகை, நின்னுக்கோரி வர்ணம், பட்டணம் சுப்பிரமணியரின் வளச்சி வாச்சி ஆகிய இசைப் படிவங்கள் கொண்டு, கதை நகரும் களங்களுக்கு இசையின் மூலமாக உங்களைக் கொண்டு செல்லும் சிறு முயற்சி இது. புதிய இசையும் மரபுசார் இசையும் இணையும்போது கிடைக்கும் அனுபவம் இது.” என்று விளக்கம் அளித்திருக்கிறார்.