ஒரே நேரத்தில் இரண்டு படங்களில் நடிக்கும் அஜித் குமார்! | சமுத்திரகனிக்கு பெரிய மனது: நெகிழ்ந்த பாலா | ராகவா லாரன்ஸின் ‛மாற்றம்' அமைப்பில் இணைந்த எஸ்.ஜே.சூர்யா! | விஜய் - அஜித்தை தொடர்ந்து விஜய் சேதுபதி படங்களும் ரீ ரிலீஸ் ஆகிறது! | பாடல் இல்லாத படத்துக்கு இசையமைக்கும் அனிருத்! | மகாதேவ் சூதாட்ட செயலி வழக்கு: நடிகர் சாஹில் கான் கைது | விஜயகாந்த்க்கு மே 9ல் பத்ம பூஷன் விருது: பிரேமலதா தகவல் | முத்தக்காட்சிகளால் படங்களை இழந்தேன்: மிருணாள் தாக்கூர் | ஹிந்திக்கு செல்லும் தில் ராஜூ! | ரன்வீர் சிங்கை இயக்கும் ஹனுமான் பட இயக்குனர்! |
சந்தானம் ஹீரோவான பிறகு சூரிதான் முன்னணி காமெடியனாக இருந்து வருகிறார். இந்தநிலையில், வடிவேலுவும் களமிறங்கியிருக்கிறார். இந்த நேரத்தில் சிங்கமுத்து, சிங்கம்புலி, ஆடுகளம் முருகதாஸ், யோகிபாபு, நான் கடவுள் ராஜேந்திரன், லொள்ளு சபா மனோகர், சாமிநாதன், கிரேன் மனோகர், பவர்ஸ்டார், உள்பட பல காமெடியன்கள் களத்தில் உள்ளனர். இவர்களில் மொட்டை ராஜேந்திரன், சிங்கம்புலி, பவர்ஸ்டார், யோகிபாபு போன்றவர்கள் ஷோலோ காமெடியனாகவும் கலக்கி வருகின்றனர். ஆனால் கிரேன் மனோகருக்கு அந்த மாதிரி வாய்ப்பு கிடைத்தும் ஷோலோ காமெடியனாக நடிக்க பயப்படுவதாக கூறுகிறார்.
அதுகுறித்து அவர் கூறுகையில், சினிமாவில் சாதாரண நடிகராக வந்து இப்போது பெயர் சொன்னால் தெரியும் அளவுக்கு வளர்ந்திருக்கிறேன். காமெடியனாகத்தான் பல படங்களில் நடித்துள்ளேன். தற்போது ஒன்பது டூ பத்து என்ற படத்தில் ஷோலோ காமெடியனாகவும் நடித்து வருகிறேன். இதைப்பார்த்து சிலர் சந்தானம், சூரி மாதிரி ஒரு காமெடி இலாகா வைத்து காமெடி ட்ரேக் பண்ண வேண்டியதானே என்கிறார்கள். ஆனால் எனக்கு அப்படி செய்ய பயமாக உள்ளது. காரணம், அப்படி நான் செய்து அது ஒர்க்அவுட்டாக வில்லை என்றால் இருக்கிற மார்க்கெட்டும் சரிந்து விடும். அதனால் டைரக்டர்கள் கொடுக்கும் காமெடியை டெவலப் பண்ணி நடித்தாலே போதும் என்று நினைக்கிறேன் என்கிறார் கிரேன் மனோகர்.