ஒரே நேரத்தில் இரண்டு படங்களில் நடிக்கும் அஜித் குமார்! | சமுத்திரகனிக்கு பெரிய மனது: நெகிழ்ந்த பாலா | ராகவா லாரன்ஸின் ‛மாற்றம்' அமைப்பில் இணைந்த எஸ்.ஜே.சூர்யா! | விஜய் - அஜித்தை தொடர்ந்து விஜய் சேதுபதி படங்களும் ரீ ரிலீஸ் ஆகிறது! | பாடல் இல்லாத படத்துக்கு இசையமைக்கும் அனிருத்! | மகாதேவ் சூதாட்ட செயலி வழக்கு: நடிகர் சாஹில் கான் கைது | விஜயகாந்த்க்கு மே 9ல் பத்ம பூஷன் விருது: பிரேமலதா தகவல் | முத்தக்காட்சிகளால் படங்களை இழந்தேன்: மிருணாள் தாக்கூர் | ஹிந்திக்கு செல்லும் தில் ராஜூ! | ரன்வீர் சிங்கை இயக்கும் ஹனுமான் பட இயக்குனர்! |
2009ல் நடித்த நான் அவனில்லை-2வுக்கு பிறகு ஜீவன் நடித்த கிருஷ்ணலீலை படம் டிராப் ஆனது. அதன்பிறகு அவருக்கு புதிய படங்கள் இல்லாததால் சினிமாவை விட்டு விலகியிருந்தார். ஆனபோதும் 6 ஆண்டுகளுக்கு பிறகு அதிபர் படம் மூலம் மறுபடியும் சினிமாவில் பிரவேசித்தார் ஜீவன்.ஆனால் அந்த படம் அவருக்கு வெற்றியை கொடுக்கவில்லை. அதையடுத்து ஷக்தி சிதம்பரம் இயக்கத்தில் ஜெயிக்கிற குதிரையில் நடித்து வருகிறார். அந்த படமும் பைனான்ஸ் பிரச்சினையில் இழுத்தடிக்கப்பட்டு வருகிறது.
இந்தநிலையில், தான் நடித்த ஹிட் படமான திருட்டு பயலே படத்தின் இரண்டாம் பாகத்தை சுசிகணேசன் இயக்குவதாக அறிந்த ஜீவன், அந்த வாய்ப்பு தனக்குத்தான் கிடைக்கும் என்று எதிர்பார்த்திருந்தாராம். ஆனால் அவர் எதிர்பார்த்த தற்கு மாறாக, அப்படத்தில் நடிக்க ஆர்யாவை தொடர்பு கொண்ட சுசிகணேசன், அவர் அந்த கதையில் நடிக்க மறுத் ததை அடுத்து இப்போது வேறு சில ஹீரோக்களிடம் கால்சீட் கேட்டு வருகிறார். இதனால், திருட்டுபயலே ஒர்ஜினல் ஹீரோ நானிருக்க இவர் வேறு யார் யாரிடமே கால்சீட் கேட்கிறாரே என்று பீல் பண்ணிக்கொண்டிருக்கிறாராம் ஜீவன்.