ஏஆர் முருகதாஸை புகழ்ந்து பேசிய ஆமிர்கான் | மதுரை, கல்லம்பட்டி-யில் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு | 'ஸ்டார்' படத்திற்கு எதிர்பாராத வியாபாரம்? | சமந்தா எத்தனை கார்கள் வைத்துள்ளார் தெரியுமா? | ஒரே நேரத்தில் இரண்டு படங்களில் நடிக்கும் அஜித் குமார்! | சமுத்திரகனிக்கு பெரிய மனது: நெகிழ்ந்த பாலா | ராகவா லாரன்ஸின் ‛மாற்றம்' அமைப்பில் இணைந்த எஸ்.ஜே.சூர்யா! | விஜய் - அஜித்தை தொடர்ந்து விஜய் சேதுபதி படங்களும் ரீ ரிலீஸ் ஆகிறது! | பாடல் இல்லாத படத்துக்கு இசையமைக்கும் அனிருத்! | மகாதேவ் சூதாட்ட செயலி வழக்கு: நடிகர் சாஹில் கான் கைது |
'பிரம்மோற்சவம்' படத்தின் மாபெரும் தோல்வியால் பல கோடிகளை நஷ்டமடைந்த பிவிபி சினிமா நிறுவனம் திரைப்படத் தயாரிப்புத் தொழிலை விட்டு விலகப் போவதாக சில நாட்களாக செய்திகள் வெளிவந்து கொண்டிருந்தன. ஆனால், அவர்கள் படத் தயாரிப்பை விட்டு விலகப் போவதில்லை என நிறுவனத்திற்கு நெருக்கமான ஒருவர் தகவலை வெளியிட்டுள்ளார்.
'பிரம்மோற்சவம்' படத் தோல்வி யோசிக்க வைத்தது உண்மைதான். அதே சமயம் இனி இயக்குனர்கள் விஷயத்தில் மிகவும் கவனமாக இருக்கப் போவதாகவும் அவர் தெரிவித்துள்ளார். தற்போது ஹிந்தி, தெலுங்கில் ராணா நடிக்க 'காஸி' திரைப்படத்தை தயாரித்து வருகிறார்கள். அடுத்து 'பெங்களூர் டேய்ஸ்' படத்தின் தெலுங்கு ரீமேக்கைத் தயாரிக்க உள்ளார்களாம். அது மட்டுமல்லாமல் அடுத்த ஆறு மாதங்களுக்குள் மேலும் 9 படங்களைத் தயாரிக்கவும் திட்டமிட்டுள்ளார்களாம்.
திரைப்படத் தயாரிப்பில் அதிக ஈடுபாடு கொண்டவர் பிவிபி சினிமா நிறுவனத் தலைவரான பிரசாத் வி பொட்லூரி. திரைப்படத் தொழிலை கார்ப்பரேட் போல மாற்ற வேண்டும் என்ற முயற்சிகளை மேற்கொண்டுள்ளார். அதற்கான பாதைகளையும் அவர் வகுத்துள்ளார். எனவே, தயாரிப்புத் தொழிலை விட்டு விலகப் போவதாக வந்த செய்திகளில் எதுவும் உண்மையில்லை என நிறுவனத்திற்கு நெருக்கமான அந்த நபர் மேலும் தெரிவித்துள்ளார்.
திரைப்படத் தொழிலுக்கு தனி ஈடுபாட்டுடன் வருபவர்களை இயக்குனர்கள் நேர்மையாகக் கையாண்டால் நன்றாக இருக்கும் என டோலிவுட்டின் மூத்த இயக்குனர்கள் பேசி வருகிறார்களாம்.