ஒரே நேரத்தில் இரண்டு படங்களில் நடிக்கும் அஜித் குமார்! | சமுத்திரகனிக்கு பெரிய மனது: நெகிழ்ந்த பாலா | ராகவா லாரன்ஸின் ‛மாற்றம்' அமைப்பில் இணைந்த எஸ்.ஜே.சூர்யா! | விஜய் - அஜித்தை தொடர்ந்து விஜய் சேதுபதி படங்களும் ரீ ரிலீஸ் ஆகிறது! | பாடல் இல்லாத படத்துக்கு இசையமைக்கும் அனிருத்! | மகாதேவ் சூதாட்ட செயலி வழக்கு: நடிகர் சாஹில் கான் கைது | விஜயகாந்த்க்கு மே 9ல் பத்ம பூஷன் விருது: பிரேமலதா தகவல் | முத்தக்காட்சிகளால் படங்களை இழந்தேன்: மிருணாள் தாக்கூர் | ஹிந்திக்கு செல்லும் தில் ராஜூ! | ரன்வீர் சிங்கை இயக்கும் ஹனுமான் பட இயக்குனர்! |
நயன்தாராவின் காதலர் என்ற அடையாளத்தைப் பெற்றுள்ள வினேஷ்சிவன் இயக்குநர் மட்டுமல்ல அடிப்படையில் பாடலாசிரியரும் கூட. 'போடா போடி' படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமான விக்னேஷ் சிவன், அந்தப்படத்தில் இடம்பெற்ற மூன்று பாடல்களையும் எழுதினார். அப்படத்தில் தன்னை இயக்குநராக மட்டுமின்றி ஒரு பாடலாசிரியராகவும் நிரூபித்தார். அதனைத் தொடர்ந்து மிர்ச்சி சிவா நடித்த 'வணக்கம் சென்னை' படத்தில் அனிருத் இசையில் பாடல் எழுதினார் விக்னேஷ் சிவன். அந்தப்படத்தில் இடம்பெற்ற சூப்பர்ஹிட் பாடலான 'எங்கடி பொறந்த' பாடலை எழுதியவர் விக்னேஷ் சிவன்தான்.
அனிருத்துடன் அப்போது ஆரம்பித்த நட்பு, அதன் பிறகு நானும் ரௌடிதான் கதையில் அனிருத்தை ஹீரோவாக நடிக்க வைக்க திட்டமிட்டது வரை சென்றது. கடைசி நேரத்தில் அனிருத்துக்கு பதில் விஜய்சேதுபதி நடித்தார். 'நானும் ரௌடிதான்' படத்தில் அனிருத் இசையமைப்பில் உருவான மொத்த பாடல்களையும் விக்னேஷ் சிவன்தான் எழுதினார்.
அதுமட்டுமில்லாமல், அனிருத்தின் 'சான்ஸே இல்லை...', 'அவளுக்கென்ன' போன்ற மியூசிக் வீடியோக்களை இயக்கியதும் இயக்குனர் விக்னேஷ் சிவன்தான். இப்படியாக தொடர்ந்த அனிருத் - விக்னேஷ் சிவன் கூட்டணி இப்போது சிவகார்த்திகேயனின் 'ரெமோ' படம் வரை தொடர்கிறது. 'ரெமோ' படத்தில் டைட்டில் பாடலாக இடம்பெறவிருக்கும் தீம் மியூசிக் பாடலுக்கான வரியை விக்னேஷ் சிவன்தான் எழுதியிருக்கிறார்.