ஒரே நேரத்தில் இரண்டு படங்களில் நடிக்கும் அஜித் குமார்! | சமுத்திரகனிக்கு பெரிய மனது: நெகிழ்ந்த பாலா | ராகவா லாரன்ஸின் ‛மாற்றம்' அமைப்பில் இணைந்த எஸ்.ஜே.சூர்யா! | விஜய் - அஜித்தை தொடர்ந்து விஜய் சேதுபதி படங்களும் ரீ ரிலீஸ் ஆகிறது! | பாடல் இல்லாத படத்துக்கு இசையமைக்கும் அனிருத்! | மகாதேவ் சூதாட்ட செயலி வழக்கு: நடிகர் சாஹில் கான் கைது | விஜயகாந்த்க்கு மே 9ல் பத்ம பூஷன் விருது: பிரேமலதா தகவல் | முத்தக்காட்சிகளால் படங்களை இழந்தேன்: மிருணாள் தாக்கூர் | ஹிந்திக்கு செல்லும் தில் ராஜூ! | ரன்வீர் சிங்கை இயக்கும் ஹனுமான் பட இயக்குனர்! |
தர்மதுரை படத்தை முடித்ததும் மணிகண்டனின் ஆண்டவன் கட்டளை படத்தில் நடிக்கத் தொடங்கிய விஜய சேதுபதி, தற்போது றெக்கை, காத்து வாக்குல ரெண்டு காதல், விக்ரம் வேதா, கே.வி.ஆனந்த் இயக்கும் படம் என பல படங்களில் ஒரே நேரத்தில் நடித்து வருகிறார். அதுவும் மாதக் கணக்கில் படங்களை இழுத்தடிக்காமல் அதிகபட்சம் இரண்டு மாதங்களுக்குள் தனக்கான போர்ஷனை முடித்துக் கொடுத்து விடுகிறார்.
இந்த நிலையில், விஜயசேதுபதியைக்கொண்டு தான் இயக்கும் படத்திற்கு மொத்தமாக 6 மாதம் கால்சீட் கேட்டாராம் கே.வி.ஆனந்த். ஆனால் அப்படி கொடுக்க மறுத்து விட்டாராம் விஜயசேதுபதி. அதோடு, நான் ஒரே நேரத்தில் 6 படங்களில் நடிக்கிறேன். இந்த நேரத்தில் மொத்த கால்சீட்டை யும் உங்களுக்கே தந்துவிட்டு மற்றவர்களை வெயிட் பண்ண வைக்க முடியாது. வேண்டுமானால் 3 மாதங்களுக்கு மாதம் 20 நாள் வீதம் கால்சீட் தருகிறேன். அதற்குள் உங்களுக்குத்தேவையான காட்சிகளை என்னை வைத்து படமாக்கிக்கொள்ளுங்கள் என்று உறுதியாக சொல்லி விட்டாராம் விஜயசேதுபதி.
எப்போதுமே தனது படங்களில் நடிக்கும் ஹீரோக்களை வைத்து வருடக்கணக்கில் படப்பிடிப்பு நடத்தும் கே.வி.ஆனந்த். இப்போது ரொம்ப பிஸியான நடிகரான விஜயசேது பதியிடம் சிக்கிக்கொண்டதால், நம்ம வழிக்கு அவர் வர வாய்ப்பில்லை. அதனால் நாமே அவர் வழிக்கு சென்று விடுவோம் என்று விஜயசேதுபதியின் முடிவுக்கு தன்னை மாற்றிக்கொண்டுள்ளார் கே.வி.ஆனந்த்.