ஒரே நேரத்தில் இரண்டு படங்களில் நடிக்கும் அஜித் குமார்! | சமுத்திரகனிக்கு பெரிய மனது: நெகிழ்ந்த பாலா | ராகவா லாரன்ஸின் ‛மாற்றம்' அமைப்பில் இணைந்த எஸ்.ஜே.சூர்யா! | விஜய் - அஜித்தை தொடர்ந்து விஜய் சேதுபதி படங்களும் ரீ ரிலீஸ் ஆகிறது! | பாடல் இல்லாத படத்துக்கு இசையமைக்கும் அனிருத்! | மகாதேவ் சூதாட்ட செயலி வழக்கு: நடிகர் சாஹில் கான் கைது | விஜயகாந்த்க்கு மே 9ல் பத்ம பூஷன் விருது: பிரேமலதா தகவல் | முத்தக்காட்சிகளால் படங்களை இழந்தேன்: மிருணாள் தாக்கூர் | ஹிந்திக்கு செல்லும் தில் ராஜூ! | ரன்வீர் சிங்கை இயக்கும் ஹனுமான் பட இயக்குனர்! |
குறைந்தக் காலக் கட்டத்தில் சிறந்த தயாரிப்பு நிறுவனம் என்று தனது நிறுவனமான ஸ்டுடியோ 9 நிறுவனத்துக்கு பெயர் ஈட்டி தந்த சுரேஷ் நடிப்பின் மேல் உள்ள தனது காதலால், இன்று எல்லோரும் மெச்சும் ஒரு நல்ல வில்லனாக உரு எடுத்து இருக்கிறார். நம்பியார், வீரப்பன் முதல் ரகுவரன், பிரகாஷ் ராஜ் வரை நல்ல வில்லன் நடிகர்களை வரவேற்கும் தமிழ் திரைப் பட உலகம் இவருக்கும் தாரை தப்பட்டையுடன் இரத்தின கம்பள வரவேற்ப்பு கொடுத்து இருக்கிறது. அதோடு சமீபத்தில் வெளியான மருது படமும் சுரேஷ்க்கு சிறப்பான வரவேற்பை தந்துள்ளது. சமீபமாக நமது நேட்டிவிட்டிக்கு பொருந்தாத வட இந்திய வில்லன்களைபார்த்து சலித்து வரும் தமிழ் ரசிகர்கள், ஆக்ரோஷமான நடிப்பை வெளிப்படுத்தும் தனக்குக் கொடுக்கும் வரவேற்பை கண்டு நெகிழ்ந்துப் போய் இருக்கிறார் சுரேஷ்.
இதுகுறித்து சுரேஷ் மகிழ்ச்சிப்பட கூறியிருப்பதாவது... ''எனக்கு கிடைத்து இருக்கும் இந்த வரவேற்ப்பு எனக்கு உற்சாகம் தந்த அளவுக்கு பொறுப்பும் கொடுத்து இருக்கிறது என்றுத் தான் சொல்லுவேன். இந்த அந்தஸ்து எனக்கு ஒரு நாளில் வந்தது இல்லை. கடினமான உழைப்பும், தீராத நடிப்பு பசிதான் காரணம் என்பேன்.நான் ஒரு இயக்குனரின் நடிகனாக தான் இருக்க விரும்புகிறேன். எனக்கு ஒரு நடிகனாக முகவரி தந்த பாலா சாருக்கு வாழ்நாள் முழுக்க கடமைப்பட்டு இருக்கிறேன்'' என்று தன் முறுக்கு மீசையை தடவியபடி கூறுகிறார்.