ஒரே நேரத்தில் இரண்டு படங்களில் நடிக்கும் அஜித் குமார்! | சமுத்திரகனிக்கு பெரிய மனது: நெகிழ்ந்த பாலா | ராகவா லாரன்ஸின் ‛மாற்றம்' அமைப்பில் இணைந்த எஸ்.ஜே.சூர்யா! | விஜய் - அஜித்தை தொடர்ந்து விஜய் சேதுபதி படங்களும் ரீ ரிலீஸ் ஆகிறது! | பாடல் இல்லாத படத்துக்கு இசையமைக்கும் அனிருத்! | மகாதேவ் சூதாட்ட செயலி வழக்கு: நடிகர் சாஹில் கான் கைது | விஜயகாந்த்க்கு மே 9ல் பத்ம பூஷன் விருது: பிரேமலதா தகவல் | முத்தக்காட்சிகளால் படங்களை இழந்தேன்: மிருணாள் தாக்கூர் | ஹிந்திக்கு செல்லும் தில் ராஜூ! | ரன்வீர் சிங்கை இயக்கும் ஹனுமான் பட இயக்குனர்! |
கற்றது தமிழ், தங்கமீன்கள் படங்கள் மூலம் கவனம் ஈர்த்த ராம், தற்போது இயக்கி வரும் படம் தரமணி. இதில் வசந்த் ரவி என்ற புதுமுகத்துடன் ஆண்டரியாவும், அஞ்சலியும் நடித்துள்ளனர். ஜே.எஸ்.கே பிலிம் கார்பரேஷன் சார்பில் சதீஷ் குமார் தயாரித்துள்ளார். யுவன் இசை அமைத்துள்ளார், தேனி ஈஸ்வர் ஒளிப்பதிவு செய்துள்ளார். படத்தை பற்றி ராம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் ஆண்ட்ரியாவை அரபுக்குதிரை என்றும் நல்ல தமிழ் பேசுகிறவர் என்றும் வர்ணித்துள்ளார்.
அவர் மேலும் கூறியிருப்பதாவது: தரமணி என்னுடைய மூன்றாவது படம். முழுக்க, முழுக்க காதலால் நிறைந்த என்னுடைய முதல் படம். காதலுக்கே உரிய கவிதை உண்டு. வயதைப் பொருட்படுத்தாத மாபெரும் இளமை உண்டு. அடிக்கடலில் நீச்சலிடும் சாகசம் உண்டு. மலையில் இருந்து குதிக்கும் பைத்தியக்காரத்தனமும் உண்டு. அரவணைப்பும் உண்டு, அரக்கத்தனமான சண்டையும் உண்டு. அறம் தாண்டும் இச்சையும் உண்டு, பெரும் வன்மமும் உண்டு. புத்துயிர்த்தலும் உண்டு, ஆண் - பெண் உறவின் அனைத்து சிக்கலும் உண்டு.
கடலினும் பெரிய காதலை இப்படி எல்லா வகையிலும் இந்த ஒரு கதைக்குள் முடிந்த வரை நிஜமாக வைத்திருக்கிறேன். அந்த நிஜம் உங்களுக்கு கொண்டாட்டத்தைக் கொடுக்கும். அந்த நிஜம் உங்களைக் காதல் வயப்படுத்தும். அந்த நிஜம் உங்களை பயமுறுத்தும். ஒரு வரியில் சொல்வதாக இருந்தால், அந்த நிஜம் நீங்கள் காதல் கொண்டவரிடம் மன்னிப்புக் கேட்கச் சொல்லும், மன்றாடச் சொல்லும், முத்தம் கொடுக்கச் சொல்லும், கட்டிப்பிடித்துக் காமத்தைக் கடந்து போகச் சொல்லும். இதுவே தரமணி.
ஆண்ட்ரியா ஜெரிமியா ஓர் அபாரமான நடிகை. தமிழை, தமிழாகவே பேசத் தெரிந்த வெகு சொற்பக் கதாநாயகிகளில் ஒருவர் என்பதை எனக்குத் தரமணி அடையாளம் காட்டியது. கற்றது தமிழ் ஆனந்தி, அபூர்வ செளம்யாவாக தரமணி படத்தளத்தில் மீண்டும் ஒருமுறை எங்களைப் பரவசப்படுத்தினார். பெரும் தாடியோடும், நல்ல உயரத்தோடும் அடர்ந்த குரலோடும் அறிமுகமாகிறார் வசந்த் ரவி. அடங்க மறுக்கிற ஓர் நேர்மையான அரேபியக் குதிரையாய் ஆண்ட்ரியாவும், அந்தக் குதிரையில் பயணம் செய்யத் தவிக்கிற ஒரு நோஞ்சான் வீரனாய் வசந்த் ரவியும், உங்களை சிரிக்க வைப்பார்கள், ஆட வைப்பார்கள், அதிர வைப்பார்கள், பெரும் பிரியம் கொள்ள வைப்பார்கள். என்கிறார் ராம்.