ஒரே நேரத்தில் இரண்டு படங்களில் நடிக்கும் அஜித் குமார்! | சமுத்திரகனிக்கு பெரிய மனது: நெகிழ்ந்த பாலா | ராகவா லாரன்ஸின் ‛மாற்றம்' அமைப்பில் இணைந்த எஸ்.ஜே.சூர்யா! | விஜய் - அஜித்தை தொடர்ந்து விஜய் சேதுபதி படங்களும் ரீ ரிலீஸ் ஆகிறது! | பாடல் இல்லாத படத்துக்கு இசையமைக்கும் அனிருத்! | மகாதேவ் சூதாட்ட செயலி வழக்கு: நடிகர் சாஹில் கான் கைது | விஜயகாந்த்க்கு மே 9ல் பத்ம பூஷன் விருது: பிரேமலதா தகவல் | முத்தக்காட்சிகளால் படங்களை இழந்தேன்: மிருணாள் தாக்கூர் | ஹிந்திக்கு செல்லும் தில் ராஜூ! | ரன்வீர் சிங்கை இயக்கும் ஹனுமான் பட இயக்குனர்! |
இன்று மே 20ம் தேதி 'மருது, கத சொல்லப் போறோம்' ஆகிய இரண்டு படங்கள் மட்டுமே வெளியாகின்றன. இந்த ஐந்து மாதத்தில் ஒரு வெள்ளிக்கிழமையில் மிகவும் குறைவான அளவில் படங்கள் வெளியாகும் நாளாக இன்று உள்ளது. இன்று வெளிவருவதாக இருந்த 'இது நம்ம ஆளு' திரைப்படம் வழக்கம் போல் தள்ளி வைக்கப்பட்டு அடுத்த வாரம் வெளிவருவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
'பாண்டிய நாடு' படத்திற்குப் பிறகு வெளிவந்த 'நான் சிகப்பு மனிதன், பூஜை, ஆம்பள, பாயும் புலி, கதகளி' ஆகிய ஐந்து படங்களும் தோல்விப் படங்களாகவே அமைந்தது. அவரும் படத்திற்குப் படம் வித்தியாசமான கதாபாத்திரங்களில் நடித்தாலும் 'பாண்டிய நாடு' படத்திற்குக் கிடைத்தது போன்ற பெரிய வெற்றி கிடைக்கவில்லை. ஆனால், அப்படி ஒரு வெற்றியை 'மருது' படம் கொடுக்கும் என்ற ஒரு எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. 'குட்டிப்புலி, கொம்பன்' ஆகிய படங்களுக்குப் பிறகு இயக்குனர் முத்தையா இந்தப் படத்தையும் நல்ல குடும்ப சென்டிமென்ட்டுடன் இயக்கியிருப்பதாகச் சொல்கிறார்கள். இந்தப் படமும் வெற்றி பெற்றால் முத்தையா ஹாட்ரிக் வெற்றி பெற்ற இயக்குனராகிவிடுவார்.
'கத சொல்லப் போறோம்' திரைப்படம் சிறுவர், சிறுமியர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்த படமாக வெளிவர உள்ளது. இம்மாதிரியான படங்களில் குழந்தைகளும் ரசிக்கும் விதத்தில் கதை சொல்லியிருந்தால் படம் வெற்றிபெற வாய்ப்புண்டு. இந்தப் படத்தைப் பொறுத்தவரையில் கிளைமாக்ஸ் காட்சி மிகவும் நெகிழ வைக்க ஒன்றாக இருக்கும். அது மட்டும் படத்தைப் பற்றிப் பேச வைக்கும்.
பெரிய போட்டிகள் இல்லாதததால் 'மருது' படம் மக்களைக் கவர வாய்ப்புகள் அதிகம் என்றே தோன்றுகிறது.