ஒரே நேரத்தில் இரண்டு படங்களில் நடிக்கும் அஜித் குமார்! | சமுத்திரகனிக்கு பெரிய மனது: நெகிழ்ந்த பாலா | ராகவா லாரன்ஸின் ‛மாற்றம்' அமைப்பில் இணைந்த எஸ்.ஜே.சூர்யா! | விஜய் - அஜித்தை தொடர்ந்து விஜய் சேதுபதி படங்களும் ரீ ரிலீஸ் ஆகிறது! | பாடல் இல்லாத படத்துக்கு இசையமைக்கும் அனிருத்! | மகாதேவ் சூதாட்ட செயலி வழக்கு: நடிகர் சாஹில் கான் கைது | விஜயகாந்த்க்கு மே 9ல் பத்ம பூஷன் விருது: பிரேமலதா தகவல் | முத்தக்காட்சிகளால் படங்களை இழந்தேன்: மிருணாள் தாக்கூர் | ஹிந்திக்கு செல்லும் தில் ராஜூ! | ரன்வீர் சிங்கை இயக்கும் ஹனுமான் பட இயக்குனர்! |
நாணயம் படத்திற்கு பிறக நான்கு வருடங்களாக சரியான கதைகள் அமையாமல் போராடிக்கொண்டிருந்த சிபிராஜ் 2014ல் நடித்த படம்தன் நாய்கள் ஜாக்கிரதை. ஒரு புதுவித ஓப்பனிங் கொடுக்க வேண்டும என்று காத்திருந்தவர் அந்த படத்தில் நாயுடன் என்ட்ரி கொடுத்தார். அந்த படமும் வெற்றி பெற்றது. அதை யடுத்து போக்கிரிராஜாவில் காமெடி கலந்த நெகடீவ் ரோலில் நடித்த சிபிராஜ்க்கு அந்த படமும் ஓரளவு நல்ல பெயரையே வாங்கிக்கொடுத்தது. அதனால் தற்போது ஜாக்சன் துரையில் புதிய உற்சாகத்துடன் நடித்துக்கொண்டிருக்கிறார்.
மேலும், வித்தியாசமான ஹாரர் கதையில் உருவாகியுள்ள இந்த படத்தில் சிபிராஜ்க்கு ஐஸ்வர்யா ராஜேஷ், சாந்தினி என இரண்டு ஜோடிகள் இருக்கிறார்களாம். அப்படி இருந்தும் படத்தில் பெரிதாக ரொமான்ஸ் காட்சிகள் இல்லையாம். அதிரடியான காட்சிகள்தான் உள்ளதாம். அதோடு, ஹீரோ, வில்லன் என இரண்டுவிதமான பர்பாமென்சையும் கொடுத்துவிட்ட சிபிராஜ், இந்த படத்தில் அதையும் தாண்டி ஒரு பன்முக கலைஞனாக தன்னை பிரதிபலித்திருக்கிறாராம. அந்த வகையில், ஜாக்சன்துரை சிபிராஜ்க்கு மிக முக்கியமான படமாக இருக்குமாம்.