ஒரே நேரத்தில் இரண்டு படங்களில் நடிக்கும் அஜித் குமார்! | சமுத்திரகனிக்கு பெரிய மனது: நெகிழ்ந்த பாலா | ராகவா லாரன்ஸின் ‛மாற்றம்' அமைப்பில் இணைந்த எஸ்.ஜே.சூர்யா! | விஜய் - அஜித்தை தொடர்ந்து விஜய் சேதுபதி படங்களும் ரீ ரிலீஸ் ஆகிறது! | பாடல் இல்லாத படத்துக்கு இசையமைக்கும் அனிருத்! | மகாதேவ் சூதாட்ட செயலி வழக்கு: நடிகர் சாஹில் கான் கைது | விஜயகாந்த்க்கு மே 9ல் பத்ம பூஷன் விருது: பிரேமலதா தகவல் | முத்தக்காட்சிகளால் படங்களை இழந்தேன்: மிருணாள் தாக்கூர் | ஹிந்திக்கு செல்லும் தில் ராஜூ! | ரன்வீர் சிங்கை இயக்கும் ஹனுமான் பட இயக்குனர்! |
1976ம் ஆண்டு இயக்குனர் ராம. நாராயணன் உருவாக்கிய தயரிப்பு நிறுவனம் ஸ்ரீதேனாண்டாள் பிலிம்ஸ். அவர் இயக்கிய பெரும்பாலான படங்களை அவரே தயாரித்தார். சிறு பட்ஜெட் படங்கள், விலங்குகளை வைத்து இயக்கும் படங்கள் அவரது பாணி. சகாதேவன் மகாதேவன், ஆடிவெள்ளி, தங்கமணி ரங்கமணி, மனைவி ஒரு மாணிக்கம், பாளையத்து அம்மன், நாகேஸ்வரி, குட்டிபிசாசு, மண்ணின் மைந்தன், கோட்டை மாரியம்மன், அன்னை காளிகாம்பாள் ஆகியவை முக்கிய படங்கள். ராம நாராயணன் மறைவுக்கு பிறகு அவரது மகன் ராமசாமி பொறுப்புக்கு வந்தார். அவர் பெரிய படங்களை தயாரிக்க ஆரம்பித்தார். பெரிய படங்களை வாங்கி விநியோகிக்கவும், திரையிடவும் ஆரம்பித்தார். தற்போது வல்லவனுக்கு வல்லவன், தில்லுக்கு துட்டு படங்களை தயாரித்து வருகிறார்.
தேனாண்டாள் பிலிம்ஸ் நிறுவனம் இதுவரை தமிழ், தெலுங்கு, கன்னடம், குஜராத்தி, மராத்தி மொழிகளில் 99 படங்களை தயாரித்துள்ளது. இதன் 100வது படத்தை சுந்தர்.சி.இயக்குகிறார். இது தமிழ், தெலுங்கு இந்தி என 3 மொழிகளில் தயாராகிறது. 3 மொழிக்கும் பொதுவான டைட்டில் வைக்கப்பட்டு மூன்று மொழியைச் சேர்ந்த முன்னணி கலைஞர்கள் நடிக்க இருக்கிறார்கள்.
தேனாண்டாள் பிலிம்சின் பிரமாண்ட தயாரிப்பாக இது இருக்கும் என்கிறார்கள். பாகுபலி பாணியிலான வரலாற்று கதை என்கிறார்கள். இதன் மூலம் தமிழ்நாட்டில் ஏவிஎம் நிறுவனத்துக்கு அடுத்த இடத்தை தேனாண்டாள் பிலிம்ஸ் பிடித்துள்ளது. இந்திய அளவில் 4வது இடத்தை பிடித்துள்ளது.