ஒரே நேரத்தில் இரண்டு படங்களில் நடிக்கும் அஜித் குமார்! | சமுத்திரகனிக்கு பெரிய மனது: நெகிழ்ந்த பாலா | ராகவா லாரன்ஸின் ‛மாற்றம்' அமைப்பில் இணைந்த எஸ்.ஜே.சூர்யா! | விஜய் - அஜித்தை தொடர்ந்து விஜய் சேதுபதி படங்களும் ரீ ரிலீஸ் ஆகிறது! | பாடல் இல்லாத படத்துக்கு இசையமைக்கும் அனிருத்! | மகாதேவ் சூதாட்ட செயலி வழக்கு: நடிகர் சாஹில் கான் கைது | விஜயகாந்த்க்கு மே 9ல் பத்ம பூஷன் விருது: பிரேமலதா தகவல் | முத்தக்காட்சிகளால் படங்களை இழந்தேன்: மிருணாள் தாக்கூர் | ஹிந்திக்கு செல்லும் தில் ராஜூ! | ரன்வீர் சிங்கை இயக்கும் ஹனுமான் பட இயக்குனர்! |
தமிழ்த் திரையுலகத்தில் ஒரு இயக்குனரால் தங்களது திரையுலக வாழ்க்கையில் முக்கிய திருப்பு முனையைப் பெற்றவர்கள் இரண்டு ஹீரோக்கள். அந்த இயக்குனர் பாலா, அந்த இரண்டு ஹீரோக்கள் விக்ரம், சூர்யா. தோல்வி நாயகனாகவே பல வருடங்கள் இருந்த விக்ரம் பாலா இயக்கிய 'சேது' படத்தின் மூலம் நட்சத்திர அந்தஸ்து பெற்றார். இவருக்கு நடிக்க வராதா என கிண்டல் செய்யப்பட்ட சூர்யா, பாலா இயக்கிய 'நந்தா' படத்தின் மூலம் தான் யார் என்பதையும் நிரூபித்தார்.
இந்த இருவருக்கும் இடையே இருக்கும் மோதல் என்னவென்பதை திரையுலகம் நன்றாகவே அறியும். அது சமீபத்தில் நடந்த நட்சத்திர கிரிக்கெட் கொண்டாட்டத்திலும் கூட எதிரொலித்தது. விக்ரம் பிறந்த நாள் கேக் வெட்டிய போது அந்தப் பக்கம் வராதவர் சூர்யா. வெற்றி பெற்று சூர்யா கோப்பை வாங்கும் போது அறிவிப்பாளர் அழைத்தும் அந்தப் பக்கம் போகாதவர் விக்ரம்.
ஆனாலும், இருவருக்குள்ளும் ஒரு போட்டி எப்போதும் இருக்கத்தான் செய்கிறது. அது நாயகிகளை ஒப்பந்தம் செய்வதிலும் தொடர்கிறது. '24' படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ள நித்யா மேனனை தன்னுடைய 'இருமுகன்' படத்திலும் ஒப்பந்தம் செய்யச் சொல்லியிருக்கிறார் விக்ரம். அது மட்டுமல்ல, '24' படத்தை விட 'இருமுகன்' படத்தில் நித்யா மேனன் கதாபாத்திரம் கனமானதாக இருக்க வேண்டும் என்றும் சொல்லியிருக்கிறாராம். 'இருமுகன்' படத்தில் நயன்தாரா இருந்தாலும் நித்யாவுக்கும் ஒரு மாறுபட்ட கதாபாத்திரத்தைக் கொடுத்திருக்கிறாராம் இயக்குனர் ஆனந்த் சங்கர். படம் வெளிவந்த பின் '24' படத்தை விட 'இருமுகன்' படத்தில் நித்யாவின் நடிப்பு அசத்தல் என்ற பெயர் வரவேண்டும் என்பதுதான் விக்ரமின் விருப்பம் என்கிறார்கள்.