சமந்தா எத்தனை கார்கள் வைத்துள்ளார் தெரியுமா? | ஒரே நேரத்தில் இரண்டு படங்களில் நடிக்கும் அஜித் குமார்! | சமுத்திரகனிக்கு பெரிய மனது: நெகிழ்ந்த பாலா | ராகவா லாரன்ஸின் ‛மாற்றம்' அமைப்பில் இணைந்த எஸ்.ஜே.சூர்யா! | விஜய் - அஜித்தை தொடர்ந்து விஜய் சேதுபதி படங்களும் ரீ ரிலீஸ் ஆகிறது! | பாடல் இல்லாத படத்துக்கு இசையமைக்கும் அனிருத்! | மகாதேவ் சூதாட்ட செயலி வழக்கு: நடிகர் சாஹில் கான் கைது | விஜயகாந்த்க்கு மே 9ல் பத்ம பூஷன் விருது: பிரேமலதா தகவல் | முத்தக்காட்சிகளால் படங்களை இழந்தேன்: மிருணாள் தாக்கூர் | ஹிந்திக்கு செல்லும் தில் ராஜூ! |
செல்வராகவன் இயக்கத்தில் சிம்பு நடித்த கான் படம் கடந்த வருடம் கைவிடப்பட்டது. கான் படம் ட்ராப்பானதால் சற்றே அப்செட்டில் இருந்த செல்வராகவன் அதன் பிறகு ரிலாக்ஸாகி, கௌதம் மேனன் தயாரிப்பில் நெஞ்சம் மறப்பதில்லை என்ற படத்தை இயக்கத் தொடங்கினார். எஸ்.ஜே.சூர்யா, ரெஜினா, நந்திதா உள்ளிட்ட பலர் நடித்து வரும் இப்படத்தின் படப்பிடிப்பு சென்னையில் நடைபெற்று வருகிறது.
ஒரே கட்டமாக இப்படத்தின் மொத்த படப்பிடிப்பையும் முடிக்க திட்டமிட்டு பரபரப்பாக இயங்கிக் கொண்டிருக்கிறார் செல்வராகவன். 90% படப்பிடிப்பு முடிந்துவிட்டதாகவும், இன்னும் ஓரிரு நாட்களில் மொத்த படப்பிடிப்பையும் முடித்து இறுதிகட்ட பணிகள் துவங்கப்படும் என்றும் செல்வராகவன் தெரிவித்துள்ளார். இதற்கிடையில் நேரம் கிடைக்கும்போதெல்லாம் தனது அடுத்து படத்திற்கான திரைக்கதையை எழுதும் வேலையிலும் ஈடுபட்டு வருகிறார்.
இந்தப் படத்தில் விஜய் சேதுபதியை கதாநாயகனாக நடிக்க வைக்க பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது. விஜய் சேதுபதியும் செல்வராகவன் இயக்கத்தில் ஒரு படம் நடித்துவிட வேண்டும் என்ற முனைப்பில் இருக்கிறார். செல்வராகவன் இயக்க உள்ள இந்தப்படத்தை அவரது தம்பி தனுஷ் தயாரிக்கிறார். நானும் ரௌடிதான் படம் வெளியான சில நாட்களிலேயே விஜய்சேதுபதிக்கு அட்வான்ஸ் கொடுத்தார் தனுஷ்.
தற்போது ஆண்டவன் கட்டளை, றெக்க, காத்துவாக்குல ரெண்டு காதல் உட்பட அரை டஜன் படங்களில் நடித்து வருகிறார் விஜய் சேதுபதி. இப்படங்களைத் தொடர்ந்து செல்வராகவன் இயக்கும் படத்தில் நடிப்பாராம். இப்படத்தின் படப்பிடிப்பு அடுத்தாண்டு தொடங்கப்படுமாம்.