விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் | வாக்காளர் பட்டியலில் மமிதா பைஜூ பெயர் நீக்கம் |
திருமணத்திற்குப்பின் தனது கணவன்மார்களுக்காக தங்களது பிடிவாதங்களை, கட்டுப்பாடுகளை தளர்த்தி குடும்ப வாழ்க்கையில் ஐக்கியமாகும் பெண்கள் தான் நம் நாட்டில் அதிகம். ஆனால் நஸ்ரியாவோ திருமணத்திற்காகவே தனது கொள்கையை தளர்த்திக் கொண்ட உண்மையை சமீபத்தில் வெளிப்படுத்தியுள்ளார். நேரம் படம் மூலம் அறிமுகமானபோது இன்னும் பல வருடங்கள் தமிழ் மற்றும் மலையாள சினிமாவில் கனவுக்கன்னியாக கோலோச்சப் போகிறார் என நினைத்துக்கொண்டிருந்த வேளையில் மலையாள நடிகர் பஹத் பாஸிலை திருமணம் செய்துகொண்டு இளம் ரசிகர்களின் இதயங்களை உடைத்து நொறுக்கினார் நஸ்ரியா.
என்னதான் காதல் என்றாலும் முன்னணியில் இருக்கும் நேரத்தில் அதிலும் மிக குறைந்த வயதில் திருமணத்திற்கு நஸ்ரியா எப்படி சம்மதித்தார் என திரையுலகமும் ரசிகர்களும் ஆச்சர்யப்பட்டார்கள்.. ஆனால் அதுபற்றி நஸ்ரியா சமீபத்தில் மனம் திறந்துள்ளார்.. தன்னுடைய 25வது வயதில் தான் திருமணம் செய்துகொள்ள விரும்பினாராம் நஸ்ரியா. ஆனால் பஹத் பாசிலுக்கு அவரது வீட்டினர் தீவிரமாக பெண் தேடுதலில் இறங்கி அந்த வருடமே திருமணத்தை நடத்த விரும்பினார்களாம். அதனால் பஹத் பாசிலை இழக்க விரும்பாததால் தான் தனது பிடிவாதத்தை தளர்த்தி உடனே திருமணத்திற்கு சம்மதித்தாகவும் கூறியுள்ளார் நஸ்ரியா.
ஓ.. இதுதான் காதல் என்பதா..?