ஒரே நேரத்தில் இரண்டு படங்களில் நடிக்கும் அஜித் குமார்! | சமுத்திரகனிக்கு பெரிய மனது: நெகிழ்ந்த பாலா | ராகவா லாரன்ஸின் ‛மாற்றம்' அமைப்பில் இணைந்த எஸ்.ஜே.சூர்யா! | விஜய் - அஜித்தை தொடர்ந்து விஜய் சேதுபதி படங்களும் ரீ ரிலீஸ் ஆகிறது! | பாடல் இல்லாத படத்துக்கு இசையமைக்கும் அனிருத்! | மகாதேவ் சூதாட்ட செயலி வழக்கு: நடிகர் சாஹில் கான் கைது | விஜயகாந்த்க்கு மே 9ல் பத்ம பூஷன் விருது: பிரேமலதா தகவல் | முத்தக்காட்சிகளால் படங்களை இழந்தேன்: மிருணாள் தாக்கூர் | ஹிந்திக்கு செல்லும் தில் ராஜூ! | ரன்வீர் சிங்கை இயக்கும் ஹனுமான் பட இயக்குனர்! |
ராதாமோகன் இயக்கத்தில் நடித்த உப்புக்கருவாடு படத்திற்கு பிறகு இடம் பொருள் ஏவல், அஞ்சல, உள்குத்து, காத்திருப்போர் பட்டியல், நெஞ்சம் மறப்பதில்லை என பல படங்களில் நடித்து வருகிறார் நந்திதா. இதில் விமலுடன் அவர் நடித்துள்ள அஞ்சல படம் வருகிற வெள்ளிக்கிழமை திரைக்கு வருகிறது. முன்னதாக, நேற்று இரவு 7 மணி அளவில் அந்த படத்தின் பத்திரிகையாளர் காட்சி சென்னை நுங்கம்பாக்கத்திலுள்ள போர்பிரேம் பிரிவியூ தியேட்டர் திரையிடப்பட்டது.
அப்போது, கடைசி வரிசையில் உள்ள ஒரு நான்கு இருக்கைகள் முன்பதிவு செய்யப்பட்டிருப்பதாக ஒரு அட்டை வைக்கப்பட்டிருந்தது. பெரும்பாலும் பத்திரிகையாளர் காட்சியில் இதுபோன்ற முன்பதிவு அட்டைகள் வைக்கப்படு வதில்லை என்பதால், அப்படி யார் வரப்போகிறார்கள் என்று நிருபர்கள் பேசிக்கொண்டிருக்கையில் திடீரென்று சர்ப்ரைஸாக நந்திதா தனது குடும்பத்தாருடன் என்ட்ரி கொடுத்து அந்த இருக்கைகளில் அமர்ந்தார்.
மேலும், படம் பார்த்தபோது எந்தவித ரியாக்சனும் இல்லாமல் ரசித்துக்கொண்டிருந்த நந்திதா, படம் பார்த்த நிருபர்களிடமும் படம் பற்றிய கருத்து எதுவும் கேட்கவில்லை. அதோடு, படம் முடிந்து கடைசியில் டைட்டீல் ஓடிக்கொண்டி ருப்பதுவரை ஸ்கிரீனையே கண்ணும் கருத்துமாக பார்த்த வண்ணம் அமர்ந்திருந்தார்.