ஒரே நேரத்தில் இரண்டு படங்களில் நடிக்கும் அஜித் குமார்! | சமுத்திரகனிக்கு பெரிய மனது: நெகிழ்ந்த பாலா | ராகவா லாரன்ஸின் ‛மாற்றம்' அமைப்பில் இணைந்த எஸ்.ஜே.சூர்யா! | விஜய் - அஜித்தை தொடர்ந்து விஜய் சேதுபதி படங்களும் ரீ ரிலீஸ் ஆகிறது! | பாடல் இல்லாத படத்துக்கு இசையமைக்கும் அனிருத்! | மகாதேவ் சூதாட்ட செயலி வழக்கு: நடிகர் சாஹில் கான் கைது | விஜயகாந்த்க்கு மே 9ல் பத்ம பூஷன் விருது: பிரேமலதா தகவல் | முத்தக்காட்சிகளால் படங்களை இழந்தேன்: மிருணாள் தாக்கூர் | ஹிந்திக்கு செல்லும் தில் ராஜூ! | ரன்வீர் சிங்கை இயக்கும் ஹனுமான் பட இயக்குனர்! |
வளர்ந்து வரும் நடிகராக இருந்தநிலையிலேயே ஜிகர்தண்டா படத்தில் சிறப்பாக நடித்ததற்காக தேசிய விருதை வென்றவர் நடிகர் பாபி சிம்ஹா. அதனால் பொறுப்பு கூடுதலாகிவிட்டதாக எண்ணும் அவர், அடுத்தடுத்து தான் நடிக்கும் ஒவ்வொரு படத்திலும் வித்தியாசமான வேடங்களை ஏற்று வருகிறார். கடந்த வாரம் வெளியாகி தற்போது வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் பெங்களூர் நாட்கள் படத்தில் கூட கிராமத்தனம் நிறைந்த அப்பாவி இளைஞனாக நடித்து அசத்தியிருக்கிறார் பாபி சிம்ஹா.
கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் பாபிசிம்ஹா நடித்த இறைவி படம் விரைவில் வெளிவரவிருக்கிறது. நமக்குக் கிடைத்த தகவலின்படி இறைவி படத்திலும் பாபி சிம்ஹாவுக்கு அற்புதமான கதாபாத்திரமாம்.
பாபி சிம்ஹா சொந்தமாக தயாரித்து வரும் வல்லவனுக்கும் வல்லவன் படத்தில் 14 வித்தியாசமான கெட்அப்களில் நடித்திருக்கிறாராம் பாபி சிம்ஹா. விஜய் தேசிங்கு இயக்கத்தில் உருவாகிவரும் இந்தப்படத்தில் நடிகர் கருணாகரனுக்கும் 11 கெட்அப்களாம். இரண்டு பாடல்களைத்தவிர இப்படத்தின் மற்ற காட்சிகளுக்கான படப்பிடிப்பு முடிவடைந்துவிட்டன. விரைவில் இப்ப்டம் வெளியாக உள்ளது. வல்லவனுக்கும் வல்லவன் படத்தை முடித்துவிட்டு தற்போது ஜீவா, காஜல் அகர்வால் நடிக்கும் கவலை வேண்டாம் படத்தின் படப்பிடிப்பில் கலந்து வருகிறார் பாபி சிம்ஹா.