ஒரே நேரத்தில் இரண்டு படங்களில் நடிக்கும் அஜித் குமார்! | சமுத்திரகனிக்கு பெரிய மனது: நெகிழ்ந்த பாலா | ராகவா லாரன்ஸின் ‛மாற்றம்' அமைப்பில் இணைந்த எஸ்.ஜே.சூர்யா! | விஜய் - அஜித்தை தொடர்ந்து விஜய் சேதுபதி படங்களும் ரீ ரிலீஸ் ஆகிறது! | பாடல் இல்லாத படத்துக்கு இசையமைக்கும் அனிருத்! | மகாதேவ் சூதாட்ட செயலி வழக்கு: நடிகர் சாஹில் கான் கைது | விஜயகாந்த்க்கு மே 9ல் பத்ம பூஷன் விருது: பிரேமலதா தகவல் | முத்தக்காட்சிகளால் படங்களை இழந்தேன்: மிருணாள் தாக்கூர் | ஹிந்திக்கு செல்லும் தில் ராஜூ! | ரன்வீர் சிங்கை இயக்கும் ஹனுமான் பட இயக்குனர்! |
பாண்டிராஜ் இயக்கத்தில் விஷால் நடிப்பில் ஜனவரி 14-ந்தேதி வெளியான படம் கதகளி. சுசீந்திரன் இயக்கத்தில் நடித்த பாயும்புலி அதிர்ச்சி தோல்வி கொடுத்ததால் இந்த படம் தனக்கு கைகொடுக்கும் என்ற எதிர்பார்த்தார் விஷால். ஆனால் இந்த படமும் எதிர்பார்த்தபடி வெற்றி பெறவில்லை. இருப்பினும், தெலுங்கில் வெற்றி பெறும் என்று நம்புகிறாராம் விஷால்.
மேலும், தமிழில் வெளியான அதே நாளில் ஆந்திராவிலும் வெளியிட வேண்டும் என்று முதலில் திட்டமிட்டிருந்தார். ஆனால் தியேட்டர் பிரச்சினையால் ஒருவாரம் தள்ளி வைக்க முடிவெடுத்த நிலையில், கடந்த வாரம் அங்கு 4 தெலுங்கு படங்கள் ஒரே நாளில் வெளியானது. அதனால் ரிலீஸ் தேதியை வருகிற 12-ந்தேதிக்கு மாற்றி விட்டார்களாம்.
அதோடு, அப்பட நாயகி கேத்ரின் தெரசாவுக்கு தெலுங்கில் ஒரு ரசிகர் வட்டம் இருப்பதால் அதிகபட்சமாக 300 தியேட்டர்களில் கதகளியை வெளியிடும் முயற்சிகளும் நடந்தது. ஆனால் அந்த அளவுக்கு தியேட்டர்கள் கிடைக்கவில்லையாம். தற்போதைய நிலவரப்படி 210 தியேட்டர்கள் ஓகேவாகி விட்டதாம். அதனால், பிப்ரவரி 12-ந்தேதி கதகளி ஆந்திராவில் வெளியாவது உறுதியாகி விட்டதாக சொல்கிறார்கள்.