ஒரே நேரத்தில் இரண்டு படங்களில் நடிக்கும் அஜித் குமார்! | சமுத்திரகனிக்கு பெரிய மனது: நெகிழ்ந்த பாலா | ராகவா லாரன்ஸின் ‛மாற்றம்' அமைப்பில் இணைந்த எஸ்.ஜே.சூர்யா! | விஜய் - அஜித்தை தொடர்ந்து விஜய் சேதுபதி படங்களும் ரீ ரிலீஸ் ஆகிறது! | பாடல் இல்லாத படத்துக்கு இசையமைக்கும் அனிருத்! | மகாதேவ் சூதாட்ட செயலி வழக்கு: நடிகர் சாஹில் கான் கைது | விஜயகாந்த்க்கு மே 9ல் பத்ம பூஷன் விருது: பிரேமலதா தகவல் | முத்தக்காட்சிகளால் படங்களை இழந்தேன்: மிருணாள் தாக்கூர் | ஹிந்திக்கு செல்லும் தில் ராஜூ! | ரன்வீர் சிங்கை இயக்கும் ஹனுமான் பட இயக்குனர்! |
விசாரணை' படத்தைப் பார்த்தவர்கள் அந்த கொடுமைக்கார இன்ஸ்பெக்டரை மறக்கவே முடியாது. அப்படி ஒரு கொடூரமான கதாபாத்திரத்தில் நடித்திருப்பவர் அஜய் கோஷ். தெலுங்குப் படங்களில் வில்லனாக நடித்தவரை 'விசாரணை' படத்தின் மூலம் தமிழுக்குக் கொண்டு வந்தார் இயக்குனர் வெற்றிமாறன். தற்போது ராஜமௌலி இயக்கி வரும் பாகுபலி 2' படத்தில் வழிப்பறிக் கொள்ளைக் காரனாக ஒரு கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார் அஜய் கோஷ். கேரளாவில் நடைபெற்ற படப்பிடிப்பில் கலந்து கொண்டனர், அடுத்த கட்டப் படப்பிடிப்புக்காகக் காத்துக் கொண்டிருக்கிறார்.
விசாரணை பட அனுபவத்தைப் பற்றிப் பேசும் போது, ''வில்லன் கதாபாத்திரமாக இருந்தாலும் மக்கள் என்னை ஏற்றுக் கொண்டுள்ளனர். முதல் நாள் காட்சியை படத்தின் இயக்குனருடன் பார்த்தேன், தியேட்டரை விட்டு பயந்து கொண்டே தான் வெளியே வந்தேன். ஆனால் அனைவரும் எனது நடிப்பைப் பாராட்டினார்கள். படத்தில் தினேஷை அடிக்கும் காட்சிகளில் நானே கண் கலங்கிப் போய்விட்டேன். அவரை அடிக்க டம்மியான லத்தி தான் பயன்படுத்தப்பட்டது என்றாலும் அதை வேமாகப் பயன்படுத்தியது வருத்தமாகத்தான் இருந்தது என்கிறார்.
தமிழ் சினிமாவில் இருக்கும் வில்லன் பஞ்சத்தை அஜய் கோஷ் தீர்த்து வைப்பார் என்று எதிர்பார்க்கலாம்.