மகாதேவ் சூதாட்ட செயலி வழக்கு: நடிகர் சாஹில் கான் கைது | விஜயகாந்த்க்கு மே 9ல் பத்ம பூஷன் விருது: பிரேமலதா தகவல் | முத்தக்காட்சிகளால் படங்களை இழந்தேன்: மிருணாள் தாக்கூர் | ஹிந்திக்கு செல்லும் தில் ராஜூ! | ரன்வீர் சிங்கை இயக்கும் ஹனுமான் பட இயக்குனர்! | மே 1ம் தேதி ரீ ரிலீஸாகும் தீனா படம்! | கவின், ஆண்ட்ரியா படத்திற்கு இசையமைக்கும் ஜி.வி. பிரகாஷ்! | ஹாலிவுட்டில் ரீ ரிலீசாகிறது 'இன்டர்ஸ்டெல்லர்' | பெண்களை அடிமைப்படுத்தும் 'பரதா': சர்ச்சையுடன் உருவாகும் புதிய படம் | இணையத்தில் கசிந்த 'ராமாயணம்' படப்பிடிப்பு காட்சிகள்: படக்குழு அதிர்ச்சி |
ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைப்பாளராக அறிமுகமான மின்னலே படத்தில் வசீகரா, இரு விழி உனது -ஆகிய ஹிட் பாடல்கள் மூலம் பிரபலமானவர் பாடலாசிரியர் தாமரை. அதையடுத்து காக்க காக்க, வாரணம் ஆயிரம் என பல படங்கள் பல மெலோடி பாடல்களை எழுதினார். சமீபத்தில்கூட என்னை அறிந்தால் படத்தில் அவர் எழுதிய உனக்கென்ன வேணும் சொல்லு என் பாடல் சூப்பர் ஹிட்டானத. அந்த வகையில், ஏ.ஆர்.ரகுமான், ஹாரிஸ் ஜெயராஜ் போன்ற முன்னணி இசையமைப்பாளர்களின் இசையில் அதிகமான பாடல்களை எழுதியிருக்கிறார் தாமரை.
மேலும், சமீபகாலமாக பாடல்களில் மெலோடித்தன்மை குறைந்து கானா பாடல்களின் ஆதிக்கம் அதிகரித்துள்ளது. ஆனபோதும், தாமரையைப் பொறுத்த வரை தரமான பாடல்களையே எழுதுவது என்பதில் உறுதியாக இருந்து வருகிறார். குறிப்பாக, கொச்சைத்தமிழில் எழுதப்படும் கானா பாடல்களை எழுத அவர் ஒத்துக்கொள்வதே இல்லையாம். தன்னை படத்தின் முழுப்பாடல்களை எழுத சொல்லும் டைரக்டர்களிடம்கூட, கானா பாடல்கள் இருக்கும்பட்சத்தில் அதை வேறு பாடலாசிரியர்களை வைத்து எழுதிக்கொள்ளுங்கள் என்று விட்டுக்கொடுத்து விடுகிறராம் தாமரை.