ஒரே நேரத்தில் இரண்டு படங்களில் நடிக்கும் அஜித் குமார்! | சமுத்திரகனிக்கு பெரிய மனது: நெகிழ்ந்த பாலா | ராகவா லாரன்ஸின் ‛மாற்றம்' அமைப்பில் இணைந்த எஸ்.ஜே.சூர்யா! | விஜய் - அஜித்தை தொடர்ந்து விஜய் சேதுபதி படங்களும் ரீ ரிலீஸ் ஆகிறது! | பாடல் இல்லாத படத்துக்கு இசையமைக்கும் அனிருத்! | மகாதேவ் சூதாட்ட செயலி வழக்கு: நடிகர் சாஹில் கான் கைது | விஜயகாந்த்க்கு மே 9ல் பத்ம பூஷன் விருது: பிரேமலதா தகவல் | முத்தக்காட்சிகளால் படங்களை இழந்தேன்: மிருணாள் தாக்கூர் | ஹிந்திக்கு செல்லும் தில் ராஜூ! | ரன்வீர் சிங்கை இயக்கும் ஹனுமான் பட இயக்குனர்! |
நடிகர் ரஜினிகாந்த்திற்கு, நாட்டின் இரண்டாவது உயரிய விருதான பத்மவிபூஷண் விருது அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த விருது தனக்கு பெருமை அளிப்பதாகவும், தன் நலம் விரும்பிகளுக்கு அனைவருக்கும் நன்றி என ரஜினிகாந்த் கூறியுள்ளார்.
தமிழ்த் திரையுலகில் சூப்பர் ஸ்டாராகவும், இந்தியத் திரையுலகில் மிகவும் பிரபலமான ஸ்டாராகவும் விளங்கி வருபவர் ரஜினிகாந்த். மக்கள் நடிகராகவே இருந்து வரும் ரஜினிகாந்த் இதுவரை மிகப் பெரிய விருதுகள் எதையும் வாங்கியதில்லை. அதிகமான திரைப்பட விருதுகளையும் அவர் வாங்கியதில்லை. பெரும்பாலும் தான் நடிக்கும் படங்களை வாங்குபவர்களும், அதை ரசிப்பவர்களும் மகிழ்ச்சியாக இருக்க வேண்டும் என்ற ஒரே நோக்கத்தில் கமர்ஷியலான படங்களில் மட்டுமே நடித்து வருபவர். எந்த விதமான விபரீத, பரீட்சார்த்த முயற்சிகளை தன் படங்களில் அவர் அதிகம் எடுத்ததில்லை.
இந்நிலையில் ஒவ்வொரு ஆண்டும் குடியரசு தின விழாவை முன்னிட்டு பல்வேறு துறையில் சாதித்தவர்களுக்கு பத்ம விருதுகள் வழங்கி கவுரவிக்கிறது மத்திய அரசு. அதன்படி இந்தாண்டு குடியரசு தினவிழாவை முன்னிட்டு மத்திய அரசு பத்ம விருதுகளை அறிவித்துள்ளது.
இதில், தமிழ் சினிமாவின் சூப்பர் ஸ்டாராக இருக்கும் நடிகர் ரஜினிகாந்த்திற்கு நாட்டின் இரண்டாவது உயரிய விருதான பத்மவிபூஷண் விருது அறிவிக்கப்பட்டுள்ளது. சினிமா துறையில் இவரது சேவையை பாராட்டி மத்திய அரசு இந்த விருதை அவருக்கு வழங்கி கவுரவிக்க இருக்கிறது.
ஏற்கனவே கடந்த 2000-ம் ஆண்டு ரஜினிக்கு பத்மபூஷண் விருது வழங்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
மிகவும் பெருமைப்படுகிறேன் - ரஜினி : இந்த பத்மவிபூஷண் விருது எனக்கு பெருமையளிக்கிறது. என்னுடைய ரசிகர்கள், நலம் விரும்பிகள், நண்பர்கள் மற்றும் அனைவருக்கும் என் மனப்பூர்வமான நன்றியை தெரிவித்து கொள்கிறேன் என்று நடிகர் ரஜினிகாந்த் தன் டுவிட்டர் பக்கத்தில் கூறியிருக்கிறார்.