ஒரே நேரத்தில் இரண்டு படங்களில் நடிக்கும் அஜித் குமார்! | சமுத்திரகனிக்கு பெரிய மனது: நெகிழ்ந்த பாலா | ராகவா லாரன்ஸின் ‛மாற்றம்' அமைப்பில் இணைந்த எஸ்.ஜே.சூர்யா! | விஜய் - அஜித்தை தொடர்ந்து விஜய் சேதுபதி படங்களும் ரீ ரிலீஸ் ஆகிறது! | பாடல் இல்லாத படத்துக்கு இசையமைக்கும் அனிருத்! | மகாதேவ் சூதாட்ட செயலி வழக்கு: நடிகர் சாஹில் கான் கைது | விஜயகாந்த்க்கு மே 9ல் பத்ம பூஷன் விருது: பிரேமலதா தகவல் | முத்தக்காட்சிகளால் படங்களை இழந்தேன்: மிருணாள் தாக்கூர் | ஹிந்திக்கு செல்லும் தில் ராஜூ! | ரன்வீர் சிங்கை இயக்கும் ஹனுமான் பட இயக்குனர்! |
'கும்கி' படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் ஹீரோவாக அறிமுகமானவர் மறைந்த நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் பேரன் விக்ரம் பிரபு. தொடர்ந்து இவன் வேற மாதிரி, அரிமா நம்பி, இது என்ன மாயம் உள்ளிட்ட படங்களில் நடித்தவர் இப்போது வீரசிவாஜி, வாகா போன்ற படங்களில் நடித்து வருகிறார். இப்படத்தை தொடர்ந்து அடுத்தப்படியாக 'சுந்தரபாண்டியன்' படத்தை இயக்கிய ஆர்.எஸ்.பிரபாகரன் இயக்கும் புதிய படத்தில் நடிக்கிறார். இப்படத்தின் பூஜை முறைப்படி இன்று(ஜன.20ம் தேதி) துவங்கியது. இதில் விக்ரம் பிரபு ஜோடியாக மஞ்சிமா மோகன் நடிக்கிறார்.
இப்படம் பற்றி விக்ரம் பிரபு கூறுகையில், சுந்தரபாண்டியன் படத்திற்கு பின்னர் இரண்டு - மூன்று முறை பிரபாகரனை சந்திக்கும் வாய்ப்பு வந்தது. இந்தப்படம் முற்றிலும் வித்தியாசமான படம். குறிப்பாக ஆக்ஷ்ன் பிளாக்குகள் நிறைந்த படம். என்னை முற்றிலும் வித்தியாசமான கோணத்தில் காண்பிக்க உள்ள படம் இது என்றார்.
இயக்குநர் பிரபாகரன் கூறும்போது... உண்மை சம்பவத்தை அடிப்படையாக கொண்டு இப்படம் உருவாகிறது. கதைக்களம் திருச்சியை பின்புலமாக கொண்டது. சென்னை, திருச்சி உள்ளிட்ட இடங்களில் படப்பிடிப்பை நடத்த உள்ளோம், இப்படம் ஒரு யதார்த்தமான பதிவாக இருக்கும் என்றார்.