ஒரே நேரத்தில் இரண்டு படங்களில் நடிக்கும் அஜித் குமார்! | சமுத்திரகனிக்கு பெரிய மனது: நெகிழ்ந்த பாலா | ராகவா லாரன்ஸின் ‛மாற்றம்' அமைப்பில் இணைந்த எஸ்.ஜே.சூர்யா! | விஜய் - அஜித்தை தொடர்ந்து விஜய் சேதுபதி படங்களும் ரீ ரிலீஸ் ஆகிறது! | பாடல் இல்லாத படத்துக்கு இசையமைக்கும் அனிருத்! | மகாதேவ் சூதாட்ட செயலி வழக்கு: நடிகர் சாஹில் கான் கைது | விஜயகாந்த்க்கு மே 9ல் பத்ம பூஷன் விருது: பிரேமலதா தகவல் | முத்தக்காட்சிகளால் படங்களை இழந்தேன்: மிருணாள் தாக்கூர் | ஹிந்திக்கு செல்லும் தில் ராஜூ! | ரன்வீர் சிங்கை இயக்கும் ஹனுமான் பட இயக்குனர்! |
சசிகுமார் - வரலட்சுமி நடிப்பில் பாலாவின் இயக்கத்தில் பொங்கலுக்கு வெளியாகி இருக்கும் தாரை தப்பட்டை படம் ஆரம்பிக்கப்பட்ட நாளிலிருந்து, கரகாட்டக்கலைஞர்களின் வாழ்க்கையைப் பற்றிய படம் என்று சொல்லப்பட்டது.
ஆனால், பாலாவோ ஆபாசமான வசனங்கள் மற்றும் குரூரமான காட்சிகளோடு தாரை தப்பட்டை படத்தை எடுத்திருக்கிறார்.
இதுவரை வெளியான தகவல்களுக்கு மாறாக, தாரை தப்பட்டை படம் இருப்பது ரசிகர்களை அதிர்ச்சியடைய வைத்தது.
குறிப்பாக தாரை தப்பட்டை படத்தில் இடம்பெற்றுள்ள க்ளைமாக்ஸ் காட்சி படம் பார்ப்பவர்களை டென்ஷன் அடைய வைத்துள்ளது.
நிறைமாத கர்ப்பினியான வரலட்சுமியை மார்ச்சுவரியில் வைத்து கொலை செய்துவிட்டு அவரது வயிற்றில் உள்ள குறைமாசக் குழந்தையை வெளியே எடுப்பதுபோன்ற காட்சியை படத்தில் வைத்திருக்கிறார் இயக்குநர் பாலா.
இந்தப் படத்தை சென்சார் எப்படி அனுமதித்தார்கள்? என்று தாரை தப்பட்டை படத்தைப் பார்த்த ரசிகர்கள் கேள்வி எழுப்பும்வகையில் அக்காட்சி உள்ளது.
இப்படியொரு காட்சியை தணிக்கைக்குழுவினர் எப்படி அனுமதித்தனர் என்று விசாரித்தபோது ஒரு தகவல் காதுக்கு வந்தது.
தாரை தப்பட்டை படத்தைப் பார்த்ததும் அதிர்ச்சியில் உறைந்தே போய்விட்டனராம் தணிக்கைக்குழுவினர்.
அதிகபட்சமான வன்முறையும், குரூரமான காட்சிகளும் இருப்பதால் தாரை தப்பட்டை படத்துக்கு சான்றிதழ் வழங்கவே கூடாது என்று சில உறுப்பினர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.
ஏ சான்றிதழ் வழங்குவதோடு, பல காட்சிகளை வெட்டி எறிய வேண்டும் என்று சில உறுப்பினர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.
தாரை தப்பட்டை படத்தை தடை செய்ய வேண்டும் என்று சொன்ன உறுப்பினர்களை ஒருவழியாக சமாதானம் செய்த அதிகாரி பிறகு, இயக்குநர் பாலாவை அழைத்துள்ளார்.
உள்ளே வந்த பாலாவிடம் தாரை தப்பட்டை படத்தில் அநியாயத்துக்கு வன்முறை இருப்பதால் ஏ சான்றிதழ் வழங்குவதாக அறிவித்துள்ளார்.
அதற்கு பாலா விளக்கம் சொல்ல, அவர் சொன்னதை தணிக்கை அதிகாரி ஏற்கவில்லை.
தாரை தப்பட்டை படத்துக்கு ஏ சான்றிதழ் கொடுக்க முடிவு செய்யப்பட்டது.
இதற்கிடையில் தாரை தப்பட்டை படத்தில் வில்லன் வேடத்தில் நடித்துள்ள ஒருவர், தற்போது ஆளும்கட்சியில் உள்ள ஒரு சினிமா டைரக்டரை தொடர்பு கொண்டு, தாரை தப்பட்டை படத்துக்கு யு சான்றிதழ் கிடைக்க உதவி செய்யும்படி கேட்டிருக்கிறார்.
தணிக்கை அதிகாரி அந்த இயக்குநரின் பள்ளித்தோழராம்.
வில்லன் நடிகரின் வேண்டுகோளின்படி தணிக்கை அதிகாரியை தொடர்பு கொண்டிருக்கிறார் அந்த இயக்குநர்.
“தாரை தப்பட்டை படம் உண்மையில் தடை விதிக்க வேண்டிய படம். வேறு ஒரு டைரக்டரின் படமாக இருந்திருந்தால் நிச்சயமாக தடை விதித்திருப்பேன்... பாலா என்பதால் படத்துக்கு ஏ சான்றிதழ் கொடுத்தேன்... படமா அது?.. ச்சே...” என்று கடும் கோபத்துடன் சொன்னாராம் தணிக்கை அதிகாரி.