அஜித் படத்தில் இணையும் இளம் நடிகை | மே 17ல் ரிலீஸ் ஆகும் எலெக்சன் படம் | ஆளைக் கொல்லும் நடிப்பு : பஹத் பாசிலுக்கு நயன்தாரா பாராட்டு | துருவா சார்ஜா வீட்டு விழாவில் குடும்பத்துடன் பங்கேற்ற சஞ்சய் தத் | குஷ்புவுக்கு குழந்தை பிறக்காது என சொன்னார்கள் : மனம் திறந்த சுந்தர்.சி | கூலி டீசர் குறித்து விமர்சிக்கவில்லை : வெங்கட் பிரபு விளக்கம் | நடிப்பு குறித்து கிண்டலடித்த ரசிகைக்கு காட்டமாக பதில் அளித்த மாளவிகா மோகனன் | ஸ்ருதிஹாசன் பிரிவை உறுதி செய்த காதலன் | மகளுடன் இணைந்து நடிக்கும் ஷாரூக்கான் | ஜல்லிக்கட்டு பின்னணியில் உருவாகும் 'நின்னு விளையாடு' |
பீப் ஸாங் என்ற ஆபாசப்பாட்டை உருவாக்கிய சிம்பு, அனிருத் இருவரையும் கண்டித்து பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில், பிரபல எழுத்தாளர் பட்டுக்கோட்டை பிரபாகர் தன்னுடைய பேஸ்புக் பக்கத்தில் சிம்புவுக்கு தன்னுடைய கடும் கண்டனத்தை பதிவு செய்திருந்தார். இது குறித்த செய்தியை நாம் ஏற்கனவே வெளியிட்டிருந்தோம். தற்போது மற்றொரு பிரபல எழுத்தாளரான 'க்ரைம்' நாவல் எழுத்தாளர் ராஜேஷ்குமாரும் தனது 'பேஸ்புக்' பக்கத்தில் சிம்பு, அனிருத் இருவரையும் கண்டித்து தன்னுடைய கருத்தைத் தெரிவித்துள்ளார்..
“முதல்-அமைச்சர் ஒரு பெண்ணாக இருக்கிற இந்த தமிழ்நாட்டில் சிம்புவும், அனிருத்தும் பெண்களை கொச்சைப்படுத்தும் பாடலை பாடவும், அதை நியாயப்படுத்தவும் துணிந்திருக்கிறார்கள். இப்படிப்பட்ட துணிச்சலை முதல்-அமைச்சர் ஆரம்பத்திலேயே கிள்ளி எறியவேண்டும். நாட்டையே தாயாக எண்ணி அதற்கு பாரத மாதா என்ற அழகான பெயர் சூட்டி நேசித்து வருகிறோம்.
சிம்பு, அனிருத் போன்றவர்கள் இந்த தேசத்தில் வீசும் காற்றை கூட சுவாசிக்க தகுதியற்றவர்கள். பெண் என்பவள் உடம்பால் மென்மையானவள். ஆனால் உள்ளத்தால் இரும்பை போன்றவள். ஒவ்வொரு பெண்ணும் பூவில் செய்த ஒரு ஆயுதம் என்பதை சிம்பு போன்றவர்கள் புரிந்துகொள்ளவேண்டும்.”
என்று ராஜேஷ்குமார் குறிப்பிட்டுள்ளார்.