ஒரே நேரத்தில் இரண்டு படங்களில் நடிக்கும் அஜித் குமார்! | சமுத்திரகனிக்கு பெரிய மனது: நெகிழ்ந்த பாலா | ராகவா லாரன்ஸின் ‛மாற்றம்' அமைப்பில் இணைந்த எஸ்.ஜே.சூர்யா! | விஜய் - அஜித்தை தொடர்ந்து விஜய் சேதுபதி படங்களும் ரீ ரிலீஸ் ஆகிறது! | பாடல் இல்லாத படத்துக்கு இசையமைக்கும் அனிருத்! | மகாதேவ் சூதாட்ட செயலி வழக்கு: நடிகர் சாஹில் கான் கைது | விஜயகாந்த்க்கு மே 9ல் பத்ம பூஷன் விருது: பிரேமலதா தகவல் | முத்தக்காட்சிகளால் படங்களை இழந்தேன்: மிருணாள் தாக்கூர் | ஹிந்திக்கு செல்லும் தில் ராஜூ! | ரன்வீர் சிங்கை இயக்கும் ஹனுமான் பட இயக்குனர்! |
களவாணி, வாகைசூட வா, நய்யாண்டி, சண்டிவீரன் போன்ற படங்களை இயக்கியவர் சற்குணம். அவர், சற்குணம் சினிமாஸ் என்ற பெயரில் ''மஞ்சப்பை'' என்ற படத்தை தயாரித்தார். இப்படத்தை அவரது உதவியாளர் ராகவன் இயக்கினார். இப்படம் சூப்பர் ஹிட்டானது. இப்போது மீண்டும் ஒரு படத்தை தயாரிக்க உள்ளார் சற்குணம். இதில் ஹீரோயினாக நயன்தாரா நடிக்கிறார்.
இதுப்பற்றி இயக்குநர் சற்குணம் கூறியுள்ளதாவது... எனது நிறுவனத்தின் இரண்டாவது படத்தில் நடிகை நயன்தாரா முன்னனி கதாபாத்திரம் ஏற்று நடிக்கிறார். இக்கதை கதாநாயகியை மையப்படுத்தி அமைக்கப்பட்டுள்ளது. இப்படத்தை நான் இயக்கிய களவானி முதல் சண்டிவீரன் வரை என்னிடம் உதவி இயக்குனராக பணியாற்றிய தாஸ் ராமசாமி எழுதி இயக்குகிறார். இன்னும் பெயரிடப்படாத இப்படத்தின் நடிகர் நடிகையர் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள் தேர்வு தற்போது நடைபெற்று வருகிறது.
இப்படம் திகிலூட்டும் கிரைம் திரில்லராக நகைச்சுவை கலந்த திரைக்கதையில் அமைக்கப்பட்டுள்ளது. குழந்தைகள் முதல் பெரியவர்கள் அனைவரும் கவரும் வண்ணம் ஜனரஞ்சகமான முறையில் இப்படம் எடுக்கப்படவுள்ளது.
இவ்வாறு சற்குணம் கூறியுள்ளார்.