ஒரே நேரத்தில் இரண்டு படங்களில் நடிக்கும் அஜித் குமார்! | சமுத்திரகனிக்கு பெரிய மனது: நெகிழ்ந்த பாலா | ராகவா லாரன்ஸின் ‛மாற்றம்' அமைப்பில் இணைந்த எஸ்.ஜே.சூர்யா! | விஜய் - அஜித்தை தொடர்ந்து விஜய் சேதுபதி படங்களும் ரீ ரிலீஸ் ஆகிறது! | பாடல் இல்லாத படத்துக்கு இசையமைக்கும் அனிருத்! | மகாதேவ் சூதாட்ட செயலி வழக்கு: நடிகர் சாஹில் கான் கைது | விஜயகாந்த்க்கு மே 9ல் பத்ம பூஷன் விருது: பிரேமலதா தகவல் | முத்தக்காட்சிகளால் படங்களை இழந்தேன்: மிருணாள் தாக்கூர் | ஹிந்திக்கு செல்லும் தில் ராஜூ! | ரன்வீர் சிங்கை இயக்கும் ஹனுமான் பட இயக்குனர்! |
'கலைப்புலி' தாணு தயாரிப்பில், அட்லி இயக்கத்தில் உருவாகி வரும் தெறி படத்தில் வித்தியாசமான மூன்று தோற்றங்களில் நடிக்கிறார் விஜய். மூன்று தோற்றங்களில் நடித்தாலும் படத்தில் விஜய்க்கு ஒரு கேரக்டர்தான். கடமை தவறாத கம்பீரமான போலீஸ் அதிகாரியாக நடிக்கும் விஜய்க்கு ஜோடியாக சமந்தா, எமி ஜாக்ஸன் என இரண்டு நாயகிகள் நடிக்கிறார்கள்.
கடந்த சில மாதங்களாக தெறி படத்தின் படப்பிடிப்பு சென்னையில் பல்வேறு இடங்களில் பரபரப்பாக நடைபெற்று வந்தது. பின்னர் கோவாவுக்கு இடம்பெயர்ந்தது தெறி படக்குழு. கோவாவைத் தொடர்ந்து தற்போது பல்கேரியாவில் 'தெறி' படத்தின் படப்பிடிப்பு நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. திலீப் சுப்பாராயன் மாஸ்டரின் இயக்கத்தில் அங்கே பரபரப்பான சண்டைக் காட்சியை படமாக்கி வருகிறார்கள்.
இந்த ஆக்ஷன் காட்சிகளில் ஹாலிவுட் ஸ்டன்ட் கலைஞர் ஒருவரையும் பயன்படுத்தியிருக்கிறார்கள். டாம் க்ரூஸ் நடிப்பில் வெளிவந்த 'மிஷன் இம்பாஸிபிள்' படத்தின் 5 ஆம் பாகத்தில் ஸ்டன்ட் டிரைவராகப் பணியாற்றிய Mauro Calo என்பவர் 'தெறி' படத்தின் ஆக்ஷன் காட்சிகளை உருவாக்குவதில் திலீப் சுப்பாராயன் உடன் இணைந்து பங்கு வகித்திருக்கிறாராம். இந்த தகவலை தெறி படத்தின் இயக்குனர் அட்லி வெளியிட்டிருக்கிறார். ஒளிப்பதிவாளர் ஜார்ஜ் சி வில்லியம்ஸ், இயக்குனர் அட்லி, மாஸ்டர் திலீப் சுப்பாராயன் ஆகியோர் உறுதிப்படுத்தியிருக்கிறார்கள்.