ஒரே நேரத்தில் இரண்டு படங்களில் நடிக்கும் அஜித் குமார்! | சமுத்திரகனிக்கு பெரிய மனது: நெகிழ்ந்த பாலா | ராகவா லாரன்ஸின் ‛மாற்றம்' அமைப்பில் இணைந்த எஸ்.ஜே.சூர்யா! | விஜய் - அஜித்தை தொடர்ந்து விஜய் சேதுபதி படங்களும் ரீ ரிலீஸ் ஆகிறது! | பாடல் இல்லாத படத்துக்கு இசையமைக்கும் அனிருத்! | மகாதேவ் சூதாட்ட செயலி வழக்கு: நடிகர் சாஹில் கான் கைது | விஜயகாந்த்க்கு மே 9ல் பத்ம பூஷன் விருது: பிரேமலதா தகவல் | முத்தக்காட்சிகளால் படங்களை இழந்தேன்: மிருணாள் தாக்கூர் | ஹிந்திக்கு செல்லும் தில் ராஜூ! | ரன்வீர் சிங்கை இயக்கும் ஹனுமான் பட இயக்குனர்! |
இசை படத்திற்கு பிறகு எஸ்.ஜே.சூர்யா அடுத்து என்ன செய்வது என்று திக்கு தெரியாமல் திணறிக் கொண்டிருக்கிறார். வை ராஜா வை படத்தில் ஒரு பாட்டுக்கு ஆடினார், யட்சன் படத்தில் எஸ்.ஜே.சூர்யாவாகவே வந்தார், இறைவி படத்தில் வில்லனாக நடித்துக் கொண்டிருக்கிறார். அடுத்து விஜய்க்கு கதை சொல்லிவிட்டு காத்திருக்கிறார். இப்படி பல நிலைப்பாடுகளில் இருந்த எஸ்.ஜே.சூர்யா இப்போது ஒரு நிலையான முடிவுக்கு வந்திருக்கிறார்.
செல்வராகவனிடம் இணை இயக்குனராக பணியாற்றிய மணிகண்டன் இயக்கும் படத்தில் ஹீரோவாக நடிக்கிறார். படத்தின் டைட்டில் 174. ஒரு சந்தேக மரண வழக்கிற்கு போலீஸ் செக்ஷன் நம்பர்தான் 174. அதையே பின்னணியாக கொண்டு. அதாவது ஒரு மரணம் நடக்கிறது. அதை கொலை என்கிறது மரணம் தொடர்பான மனிதரின் உறவுகள். தற்கொலை என வழக்கை முடிக்க நினைக்கிறது போலீஸ். இதில் உண்மை என்பதை கண்டுபிடிக்கிற திரைக்கதை. காமெடி கலந்த த்ரில்லர் கதை. ஏற்கெனவே போலீஸ் செக்ஷன் 144ஐ தலைப்பாக கொண்டு ஒரு படம் தயாராகிக் கொண்டிருப்பது குறிப்பிடத்தக்கது. இந்தப் படத்திற்கு ஹீரோயின் உள்ளிட்ட மற்ற கலைஞர்களின் தேர்வுகள் நடந்து வருகிறது. அடுத்த மாதம் படப்பிடிப்பு தொடங்கிறது.