ஒரே நேரத்தில் இரண்டு படங்களில் நடிக்கும் அஜித் குமார்! | சமுத்திரகனிக்கு பெரிய மனது: நெகிழ்ந்த பாலா | ராகவா லாரன்ஸின் ‛மாற்றம்' அமைப்பில் இணைந்த எஸ்.ஜே.சூர்யா! | விஜய் - அஜித்தை தொடர்ந்து விஜய் சேதுபதி படங்களும் ரீ ரிலீஸ் ஆகிறது! | பாடல் இல்லாத படத்துக்கு இசையமைக்கும் அனிருத்! | மகாதேவ் சூதாட்ட செயலி வழக்கு: நடிகர் சாஹில் கான் கைது | விஜயகாந்த்க்கு மே 9ல் பத்ம பூஷன் விருது: பிரேமலதா தகவல் | முத்தக்காட்சிகளால் படங்களை இழந்தேன்: மிருணாள் தாக்கூர் | ஹிந்திக்கு செல்லும் தில் ராஜூ! | ரன்வீர் சிங்கை இயக்கும் ஹனுமான் பட இயக்குனர்! |
1970ல் பாரதிராஜா இயக்கிய பதினாறு வயதினிலே படத்தில் வில்லனாக நடித்த ரஜினியின் நண்பர்களில் ஒருவராக நடித்தவர் கவுண்டமணி. அந்த படத்தில் தனது நிஜ பெயரான சுப்ரமணி என்கிற கேரக்டரிலேயே நடித்தார் கவுண்டமணி. அதையடுத்து வேகமாக வளர்ந்த கவுண்டமணி ஒருகட்டத்தில் நம்பர்-ஒன் காமெடியனாகி விட்டார். செந்திலுடன் இணைந்து அவர் நடித்த காமெடி காட்சிகளுக்கு ரசிகர்கள் மத்தியில் பெரிய வரவேற்பு கிடைத்தது. அதனால் தமிழ் சினிமாவில் நீண்டகாலம் காமெடியில் கோலேச்சிய பெருமை கவுண்டமணிக்கு உண்டு.
மேலும், ஹீரோ, குணசித்ர வேடங்களிலும் நடித்தவரான கவுண்டமணி, சமீபத்தில் வெளியான 49ஓ படத்தில் நாயகனாக நடித்திருந்தார். விவசாயிகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வேடத்தில் நடித்தார் கவுண்டமணி. அதையடுத்து இப்போது எனக்கு வேறு எங்கும் கிளைகள் கிடையாது என்ற படத்தில் நாயகனாக நடித்துள்ளார். இந்த படத்தில் படப்பிடிப்புக்கு கேரவன் வாடகைக்கு விடும் உரிமையாளராக நடித்துள்ளார் கவுண்டமணி.
அதோடு, அவருக்கு பில்டப் பாடலும் உள்ளது. இப்போதைய இளவட்ட ஹீரோக்களுக்கு இணையாக ஒரு பாடலில் யூத்தான காஸ்டியூம்களை அணிந்து கலக்கல் செய்திருக்கிறாராம் கவுண்டர். தற்போது இப்படத்தின் அனைத்துகட்ட படப்பிடிப்பும் முடிந்து இறுதிகட்ட பணிகள் நடைபெற்று வருகிறது. அடுத்த வாரம் கவுண்டமணி டப்பிங் பேசுகிறாராம். எவ்வளவு வசன காட்சிகளாக இருந்தாலும் அதை ஒரே நாளில் பேசி முடித்து விடக்கூடியவரான கவுண்டமணி, இந்த படத்தில் அதிகப்படியான வசன காட்சிகள் இருந்தபோதும் இதையும் 12 மணி நேரத்தில் பேசி முடித்து விடுவார் என்று எதிர்பார்க்கிறார்களாம்.