ஒரே நேரத்தில் இரண்டு படங்களில் நடிக்கும் அஜித் குமார்! | சமுத்திரகனிக்கு பெரிய மனது: நெகிழ்ந்த பாலா | ராகவா லாரன்ஸின் ‛மாற்றம்' அமைப்பில் இணைந்த எஸ்.ஜே.சூர்யா! | விஜய் - அஜித்தை தொடர்ந்து விஜய் சேதுபதி படங்களும் ரீ ரிலீஸ் ஆகிறது! | பாடல் இல்லாத படத்துக்கு இசையமைக்கும் அனிருத்! | மகாதேவ் சூதாட்ட செயலி வழக்கு: நடிகர் சாஹில் கான் கைது | விஜயகாந்த்க்கு மே 9ல் பத்ம பூஷன் விருது: பிரேமலதா தகவல் | முத்தக்காட்சிகளால் படங்களை இழந்தேன்: மிருணாள் தாக்கூர் | ஹிந்திக்கு செல்லும் தில் ராஜூ! | ரன்வீர் சிங்கை இயக்கும் ஹனுமான் பட இயக்குனர்! |
தமிழ்த் திரையுலகில் எத்தனை கிளாமர் நடிகைகள் வந்தாலும் பலருக்கும் நம் பக்கத்து வீட்டுப் பெண் போன்ற அஞ்சலி, ஸ்ரீதிவ்யா, நந்திதா போன்ற நடிகைகள் மீது தனி பாசம் இருக்கத்தான் செய்யும். இன்றைய ரேவதி, சினேகாக்களாக பெயர் எடுப்பது என்பது அவ்வளவு சுலபமான விஷயமல்ல. அஞ்சலிக்கு அப்படி ஒரு பெயர் சில வருடங்களுக்கு முன்பு வரை இருந்தது. அவரது சொந்தப் பிரச்சனையில் அந்தப் பெயரை அவரே கெடுத்துக் கொண்டார். இருந்தாலும் மீண்டும் 'சகலகலா வல்லவன்' படம் மூலம் தமிழில் ரீ-என்ட்ரி ஆகலாம் என நினைத்தார், படம் தோல்வியடையவே அந்த ரீ-என்ட்ரி வெற்றிகரமாக முடியவில்லை.
அஞ்சலி அடுத்து நாயகியாக நடித்து முடித்துள்ள 'மாப்பிள்ளை சிங்கம்' படம் முடிவடைந்து சில மாதங்களாகியும் இன்னும் வெளிவராமலே உள்ளது. இதோ, அதோ என படத்தை இழுத்துக் கொண்டேயிருக்கிறார்கள். இந்தப் படம் மீதும், இதை விட கார்த்திக் சுப்புராஜ் இயக்கியுள்ள 'இறைவி' படத்தின் மீதும் அஞ்சலி மிகுந்த நம்பிக்கையுடன் இருக்கிறாராம். தமிழில் அஞ்சலியை அறிமுகப்படுத்திய ராம் இயக்கத்தில் 'தரமணி' படத்திலும் அஞ்சலி நாயகியாக நடிக்கிறார். எப்படியும் இந்த மூன்று படங்களும் தமிழில் தன்னை கரை சேர்த்துவிடும் என்று நம்புகிறார். விஷாலுடன் ஜோடி சேர்ந்து நடித்த 'மதகஜ ராஜா' படமும் வெளிவரும் என்று சொல்லப்படுகிறது.
அதனால், அஞ்சலி அடுத்து ஒரு ரவுண்ட் வருவதற்கு வாய்ப்புகள் அதிகம்தான்.