ஒரே நேரத்தில் இரண்டு படங்களில் நடிக்கும் அஜித் குமார்! | சமுத்திரகனிக்கு பெரிய மனது: நெகிழ்ந்த பாலா | ராகவா லாரன்ஸின் ‛மாற்றம்' அமைப்பில் இணைந்த எஸ்.ஜே.சூர்யா! | விஜய் - அஜித்தை தொடர்ந்து விஜய் சேதுபதி படங்களும் ரீ ரிலீஸ் ஆகிறது! | பாடல் இல்லாத படத்துக்கு இசையமைக்கும் அனிருத்! | மகாதேவ் சூதாட்ட செயலி வழக்கு: நடிகர் சாஹில் கான் கைது | விஜயகாந்த்க்கு மே 9ல் பத்ம பூஷன் விருது: பிரேமலதா தகவல் | முத்தக்காட்சிகளால் படங்களை இழந்தேன்: மிருணாள் தாக்கூர் | ஹிந்திக்கு செல்லும் தில் ராஜூ! | ரன்வீர் சிங்கை இயக்கும் ஹனுமான் பட இயக்குனர்! |
கிரிக்கெட் போட்டியில் எல்லா நாட்டு வீரர்களும் தனித்தனி அணியாக பிரிந்து நின்று மோதினர் அது ஐபிஎல். அதேபோல இப்போது டென்னிசிலும் சர்வதேச வீரர்கள் விளையாடும் சேம்பியன் டென்னிஸ் லீக் போட்டிகள் கடந்த ஆண்டு தொடங்கி நடந்து வருகிறது. இந்த ஆண்டு இந்த போட்டிகள் வருகிற 23ந் தேதி முதல் டிசம்பர் 5ந் தேதி வரை இந்தியாவின் பல நகரங்களில் நடக்கிறது. இதில் இந்த ஆண்டு வி சென்னை வாரியர்ஸ் என்ற அணியும் விளையாடுகிறது.
இந்த அணியை நடிகரும், இயக்குனருமான பிரபுதேவாவும், வேல்ஸ் பல்கலைகழக இணை வேந்தருமான ஐசரி கணேசும் இணைந்து வாங்கி உள்ளனர். வி சென்னை வாரியர்ஸ் அணியின் அறிமுக நிகழ்ச்சியில் பிரபல டென்னிஸ் வீரர் விஜய் அமிர்தராஜ் கலந்து கொண்டார்.
இந்த நிகழ்ச்சியில் பேசிய பிரபு தேவா, "நான் டென்னிஸ் விளையாடிதில்லை. ஆனால் டென்னிஸ் மிகவும் பிடிக்கும் நேரம் கிடைக்கும்போதெல்லாம் பார்ப்பேன். வி சென்னை வாரியர்ஸ் அணிக்கு பிராண்ட் அம்பாசிடராகத்தான் இருக்க விரும்பினேன். ஆனால் ஐசரி கணேஷ் சார் என்னையும் உரிமையாளராக்கி விட்டார். டான்சரா, டைரக்டரா, புரட்யூசரா எனக்கு நிறைய சப்போர்ட் பண்ணிய மக்கள் இப்போது விளையாட்டு துறையிலும் நான் நுழைந்திருப்பதை ஆதரிப்பார்கள் என்று நம்புகிறேன். என்றார்.