மகாதேவ் சூதாட்ட செயலி வழக்கு: நடிகர் சாஹில் கான் கைது | விஜயகாந்த்க்கு மே 9ல் பத்ம பூஷன் விருது: பிரேமலதா தகவல் | முத்தக்காட்சிகளால் படங்களை இழந்தேன்: மிருணாள் தாக்கூர் | ஹிந்திக்கு செல்லும் தில் ராஜூ! | ரன்வீர் சிங்கை இயக்கும் ஹனுமான் பட இயக்குனர்! | மே 1ம் தேதி ரீ ரிலீஸாகும் தீனா படம்! | கவின், ஆண்ட்ரியா படத்திற்கு இசையமைக்கும் ஜி.வி. பிரகாஷ்! | ஹாலிவுட்டில் ரீ ரிலீசாகிறது 'இன்டர்ஸ்டெல்லர்' | பெண்களை அடிமைப்படுத்தும் 'பரதா': சர்ச்சையுடன் உருவாகும் புதிய படம் | இணையத்தில் கசிந்த 'ராமாயணம்' படப்பிடிப்பு காட்சிகள்: படக்குழு அதிர்ச்சி |
உன்னாலே உன்னாலே படத்தில் அறிமுகமான வினய், அதன்பிறகு ஜெயம்கொண்டான், மோதிவிளையாடு, மிரட்டல், என்றென்றும் புன்னகை, அரண்மனை என பல படங்களில் நடித்தார். அரண்மனை ஹிட்டுக்கு பிறகு இருவர் உள்ளம், ஆயிரத்தில் இருவர், ஆள் அம்பு சேனை போன்ற படங்களில் கமிட்டாகி நடித்தார். இதில் எப்போதோ படப்பிடிப்பு முடிந்து விட்ட இருவர் உள்ளம் படம் இன்னும் வியாபாரம் ஆகவில்லை. சேனல் ரைட்ஸ் கொடுக்கலாம் என்று நினைத்த நேரத்தில் சிறிய நடிகர்களின் படங்களை எந்த சேனலும் வாங்க முன்வரவில்லை. அதனால் இருவர் உள்ளம் கிடப்பில் கிடக்கிறது.
அதன்பிறகு சரண் இயக்கத்தில் நடித்த ஆயிரத்தில் இருவர், ஆள் அம்பு சேனை படங்களும் பைனான்ஸ் பிரச்சினையில் கிடப்பதால் அடுத்து படவாய்ப்பில்லாமல் இருக்கிறார் வினய். இந்த நிலையில், இப்படி இன்னும் சிறிது காலம் போனால் சினிமா உலகமும், ரசிகர்களும் தன்னை மறந்தே விடுவார்கள் என்று பயப்படும் வினய், ஜீவா நடித்த என்றென்றும் புன்னகை படத்தில் அவருக்கு நண்பராக நடித்தது போன்று அடுத்து நல்ல கேரக்டர்கள் கிடைத்தால் நடிக்கலாம் என்ற முடிவுக்கு வந்திருக்கிறார். அதனால், தனது நட்பு வட்டார ஹீரோ மற்றும் டைரக்டர்களிடம் சான்ஸ் கேட்டு வருகிறார் வினய்.