ஒரே நேரத்தில் இரண்டு படங்களில் நடிக்கும் அஜித் குமார்! | சமுத்திரகனிக்கு பெரிய மனது: நெகிழ்ந்த பாலா | ராகவா லாரன்ஸின் ‛மாற்றம்' அமைப்பில் இணைந்த எஸ்.ஜே.சூர்யா! | விஜய் - அஜித்தை தொடர்ந்து விஜய் சேதுபதி படங்களும் ரீ ரிலீஸ் ஆகிறது! | பாடல் இல்லாத படத்துக்கு இசையமைக்கும் அனிருத்! | மகாதேவ் சூதாட்ட செயலி வழக்கு: நடிகர் சாஹில் கான் கைது | விஜயகாந்த்க்கு மே 9ல் பத்ம பூஷன் விருது: பிரேமலதா தகவல் | முத்தக்காட்சிகளால் படங்களை இழந்தேன்: மிருணாள் தாக்கூர் | ஹிந்திக்கு செல்லும் தில் ராஜூ! | ரன்வீர் சிங்கை இயக்கும் ஹனுமான் பட இயக்குனர்! |
நெருப்பில்லாமல் புகையாது என்பார்கள். அது திரைப்பட நட்சத்திரங்களின் கிசுகிசுவைப் பொறுத்தவரை 99 சதவீதம் உண்மையாகவே மாறியிருக்கிறது. எத்தனையோ ஜோடிகள் நாங்கள் காதலிக்கவில்லை, நல்ல நண்பர்கள்தான் என்று சொல்லிவிட்டு கடைசியில் தாங்கள் காதலர்கள்தான் என்பதை நிரூபித்திருக்கிறார்கள். மீண்டும் அப்படி ஒரு சம்பவம் பாபி சிம்ஹா, ரேஷ்மி மேனன் காதல் மூலம் நிரூபணமாகி இருக்கிறது.
அவர்களிருவரைப் பற்றி வந்த காதல் கிசுகிசுக்களை இருவருமே மறுத்தார்கள். இப்போது அந்த கிசுகிசுவே உண்மையாகிவிட்டது. இருவருக்கும் நவம்பர் 8ம் தேதி திருமண நிச்சயதார்த்தம் நடைபெற உள்ளது. பாபி சிம்ஹா, 'காதலில் சொதப்புவது எப்படி' படத்தில் ஒரு சிறு கதாபாத்திரம் மூலம் அறிமுகமாகி 'ஜிகர்தண்டா' படத்தில் தேசிய விருது பெறும் அளவிற்கு குறுகிய காலத்தில் வளர்ந்துவிட்டார். ரேஷ்மி மேனன் 'இனிது இனிது' படம் நாயகியாக அறிமுகமானார். அடுத்து பல படங்களில் நாயகியாக நடித்திருந்தாலும் எந்தப் படமும் பெரிதாக ஓடவில்லை. பாபி சிம்ஹா, ரேஷ்மி மேனன் இருவரும் 'உறுமீன்' படத்தில் சேர்ந்து நடித்த போது காதலிக்க ஆரம்பித்து இப்போது திருமணம் வரை வந்துவிட்டார்கள்.
பாபி சிம்ஹா தெலுங்கைத் தாய் மொழியாகக் கொண்டவர், ரேஷ்மி மேனன் மலையாளத்தைத் தாய் மொழியாகக் கொண்டவர், இருவரும் தமிழ்ப் படத்தில் நடிக்கும் போது காதலர்களாகியுள்ளார்கள். இருவரின் திருமண நிச்சயதார்த்தத்திற்கு இப்போது திரையுலகத்தினர் வாழ்த்து சொல்ல ஆரம்பித்துவிட்டார்கள்.