மகாதேவ் சூதாட்ட செயலி வழக்கு: நடிகர் சாஹில் கான் கைது | விஜயகாந்த்க்கு மே 9ல் பத்ம பூஷன் விருது: பிரேமலதா தகவல் | முத்தக்காட்சிகளால் படங்களை இழந்தேன்: மிருணாள் தாக்கூர் | ஹிந்திக்கு செல்லும் தில் ராஜூ! | ரன்வீர் சிங்கை இயக்கும் ஹனுமான் பட இயக்குனர்! | மே 1ம் தேதி ரீ ரிலீஸாகும் தீனா படம்! | கவின், ஆண்ட்ரியா படத்திற்கு இசையமைக்கும் ஜி.வி. பிரகாஷ்! | ஹாலிவுட்டில் ரீ ரிலீசாகிறது 'இன்டர்ஸ்டெல்லர்' | பெண்களை அடிமைப்படுத்தும் 'பரதா': சர்ச்சையுடன் உருவாகும் புதிய படம் | இணையத்தில் கசிந்த 'ராமாயணம்' படப்பிடிப்பு காட்சிகள்: படக்குழு அதிர்ச்சி |
தமிழ் சினிமாவில் டைரக்டர் மகேந்திரனுக்கு ஒரு தனி இடம் உண்டு. அவரை விட அதிகப்படியான படங்களை இயக்கிய எத்தனையோ டைரக்டர்கள் இருந்தபோதும், மகேந்திரன் இடத்தை மட்டுமே இதுவரை யாராலும் தொட முடியவில்லை. அந்த அளவுக்கு அவர் இயக்கிய முள்ளும் மலரும், உதிரிப்பூக்கள், ஜானி, நெஞ்சத்தை கிள்ளாதே, மெட்டி போன்ற படங்கள் இன்றுவரை பேசப்பட்டு வருகின்றன. அவருடைய இந்த படங்களைப் பார்த்தே வளரும் இயக்குனர்கள் ஸ்கிரிப்ட் எழுதும் தகுதியை வளர்த்துக்கொள்கின்றனர்.
இப்படி காலத்தால் அழியாத காவியங்களை கொடுத்த இயக்குனர் மகேந்திரன் சாசனம் படத்திற்கு பிறகு படம் இயக்கவில்லை. ஆனால் தற்போது அட்லி இயக்கத்தில் விஜய் நடித்து வரும் 59வது படத்தில் வில்லனாக நடிக்கிறார். இதற்கு முன்பு 2004ல் காமராஜ் படத்தில் ஒரு கேரக்டரில் நடித்த மகேந்திரன், விஜய் படத்தில் மெகா வில்லனாக நடித்து வருகிறார். மேலும், அட்லி வளர்ந்து வரும் இயக்குனராக இருந்தபோதும் அவர் சொல்லும் கருத்துக்களை கேட்டு, தன்பங்குக்கும் காட்சிகளுக்கு தேவையான சில விசயங்களை கலந்து நடிக்கிறாராம்.
அந்த வகையில், டைரக்டர் மகேந்திரன் நடிக்கும் காட்சிகள் மிரட்டலாக படமாக்கப்பட்டு வருகிறதாம். விஜய் காம்பினேசனில் அவர் நடிக்கும் காட்சிகளைப்பார்த்து சில இடங்களில் மிரண்டு போகும் விஜய், சுற்றி நிற்பவர்கள் கைதட்டு வதற்கு முன்பாக தான் கைதட்டி தனது ஆச்சர்யத்தை வெளிப்படுத்துகிறாராம். அதனால் இப்போது விஜய்யிடமும், அப்பட யூனிட்டிடமும் கைதட்டல் பெறும் மகேந்திரனின் வில்லன் நடிப்பு, தியேட்டருக்கு வரும்போது ரசிகர்களிடமிருந்து பெரிய அளவில் கைதட்டலை பெறும் என்கிறார்கள்.