ஒரே நேரத்தில் இரண்டு படங்களில் நடிக்கும் அஜித் குமார்! | சமுத்திரகனிக்கு பெரிய மனது: நெகிழ்ந்த பாலா | ராகவா லாரன்ஸின் ‛மாற்றம்' அமைப்பில் இணைந்த எஸ்.ஜே.சூர்யா! | விஜய் - அஜித்தை தொடர்ந்து விஜய் சேதுபதி படங்களும் ரீ ரிலீஸ் ஆகிறது! | பாடல் இல்லாத படத்துக்கு இசையமைக்கும் அனிருத்! | மகாதேவ் சூதாட்ட செயலி வழக்கு: நடிகர் சாஹில் கான் கைது | விஜயகாந்த்க்கு மே 9ல் பத்ம பூஷன் விருது: பிரேமலதா தகவல் | முத்தக்காட்சிகளால் படங்களை இழந்தேன்: மிருணாள் தாக்கூர் | ஹிந்திக்கு செல்லும் தில் ராஜூ! | ரன்வீர் சிங்கை இயக்கும் ஹனுமான் பட இயக்குனர்! |
2001ல் சந்தோஷ்சிவன் இயக்கிய படம் அசோகா. இந்தியில் உருவான இப்படத்தில் ஷாரூக்கான், கரீனா கபூர் முக்கிய வேடத்தில் நடித்திருந்தனர். சரித்திர கதையில் உருவான இந்த படத்தில் அஜீத்தும் ஒரு கேரக்டரில் நடித்திருந்தார். அதனால் அப்படத்தை தமிழிலும் டப் செய்து வெளியிட்டனர். ஆனால் அதன்பிறகு எந்த சரித்திர படத்திலும் அஜீத் நடிக்கவில்லை.
இந்தநிலையில், வேதாளம் படத்தை அடுத்து விஷ்ணுவர்தன் இயக்கும் புதிய படத்தில் சரித்திர கதையில் அஜீத் நடிக்கயிருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன. இதற்காக எழுத்தாளர் பாலகுமாரனுடன் இணைந்து விஷ்ணுவர்தன் கதை விவாதத்தில் ஈடுபட்டிருக்கிறார். ராஜராஜ சோழனின் வாழ்க்கை வரலாறு கதையில் இந்த படம் தயாராகிறதாம்.
ஏற்கனவே 1973ல் ராஜராஜசோழன் படத்தில் சிவாஜிகணேசன் நடித்திருந்தார். அதன்பிறகு ராஜராஜசோழன் கதையை யாரும் படமாக்கவில்லை. சமீபத்தில் பாகுபலி, புலி, ருத்ரமா தேவி என சரித்திர கதைகளில் படங்கள் வந்து கொண்டிருப்பதை அடுத்து அஜீத்திற்கும் அந்த மாதிரி கதைகளில் நடிக்கும் ஆர்வம் ஏற்பட்டிருப்பதாக கூறப்படுகிறது.
இந்த படத்தில் தஞ்சையை ஆண்ட ராஜராஜ சோழனின் கதையில் முக்கியத்துவம் வாய்ந்த தஞ்சை பெரிய கோவிலின் முக்கிய வரலாறும் இடம்பெறுகிறதாம். அதனால் அந்த கோயில் பற்றிய தகவல்கள் தற்போது சேகரிக்கப்பட்டு வருகிறதாம்.
அதேசமயம், புறம்போக்கு படத்தை இயக்கி விட்டு, அடுத்து தஞ்சை பெரிய கோயிலை மையப்படுத்தி ஒரு படம் இயக்கப்போவதாக கூறி வரும் எஸ்.பி.ஜனநாதன், விஷ்ணுவர்தனின் இந்த கதை விவாதம் குறித்து கேள்விப்பட்டு அதிர்ச்சியடைந்துள்ளாராம்.