ஒரே நேரத்தில் இரண்டு படங்களில் நடிக்கும் அஜித் குமார்! | சமுத்திரகனிக்கு பெரிய மனது: நெகிழ்ந்த பாலா | ராகவா லாரன்ஸின் ‛மாற்றம்' அமைப்பில் இணைந்த எஸ்.ஜே.சூர்யா! | விஜய் - அஜித்தை தொடர்ந்து விஜய் சேதுபதி படங்களும் ரீ ரிலீஸ் ஆகிறது! | பாடல் இல்லாத படத்துக்கு இசையமைக்கும் அனிருத்! | மகாதேவ் சூதாட்ட செயலி வழக்கு: நடிகர் சாஹில் கான் கைது | விஜயகாந்த்க்கு மே 9ல் பத்ம பூஷன் விருது: பிரேமலதா தகவல் | முத்தக்காட்சிகளால் படங்களை இழந்தேன்: மிருணாள் தாக்கூர் | ஹிந்திக்கு செல்லும் தில் ராஜூ! | ரன்வீர் சிங்கை இயக்கும் ஹனுமான் பட இயக்குனர்! |
தமிழில் என்னமோ ஏதோ, புத்தகம் படங்களில் நடித்தவர் ரகுல் ப்ரீத்தி சிங். ஆனால் இங்கு அவருக்கு சரியான வாய்ப்புகள் இல்லை. ஆந்திர பக்கம் கரை ஒதுங்கியவதற்கு அதிர்ஷ்டம் கூறையை பிய்த்துக் கொண்டு கொட்டுகிறது. டாப் ஹீரோக்களின் சாய்ஸ் பட்டியலில் இருக்கிறார். அண்மையில் ராம் சரணோடு வெளிவந்த புரூஸ்லீ தி பைட்டர் படத்தில் நடித்திருக்கிறார். பெண்கள் மது அருந்துவது பற்றி அவர் கருத்து தெரிவித்துள்ளார். அவர் கூறியிருப்பதாவது:
பொதுவாக மது அருந்துவது தவறானது, உடம்புக்கு கேடான விஷயம். தண்ணி அடிச்சிட்டு ரோட்டுல அலம்பல் பண்ணினா லூசு மாதிரி பார்ப்பாங்க. தண்ணி அடிக்கிறதுல ஆண், பெண் வித்தியாசம் எதுக்கு பார்க்கணும், யார் அடிச்சாலும் தப்பு தப்புதான். பெண்ணோ ஆணோ தண்ணி அடிக்கிறது அவரவர் தனிப்பட்ட விருப்பம். அதுல யாரும் தலையிடக்கூடாது. என்னை கேட்டா அளவு மீறாம பார்த்துக்கணும். அளவு மீறினா எதுவுமே நல்லது இல்லை. எனக்கு தண்ணி அடிக்கிற பழக்கம் இல்லப்பா... என்கிறார் ரகுல் ப்ரீத்தி சிங்.