ஒரே நேரத்தில் இரண்டு படங்களில் நடிக்கும் அஜித் குமார்! | சமுத்திரகனிக்கு பெரிய மனது: நெகிழ்ந்த பாலா | ராகவா லாரன்ஸின் ‛மாற்றம்' அமைப்பில் இணைந்த எஸ்.ஜே.சூர்யா! | விஜய் - அஜித்தை தொடர்ந்து விஜய் சேதுபதி படங்களும் ரீ ரிலீஸ் ஆகிறது! | பாடல் இல்லாத படத்துக்கு இசையமைக்கும் அனிருத்! | மகாதேவ் சூதாட்ட செயலி வழக்கு: நடிகர் சாஹில் கான் கைது | விஜயகாந்த்க்கு மே 9ல் பத்ம பூஷன் விருது: பிரேமலதா தகவல் | முத்தக்காட்சிகளால் படங்களை இழந்தேன்: மிருணாள் தாக்கூர் | ஹிந்திக்கு செல்லும் தில் ராஜூ! | ரன்வீர் சிங்கை இயக்கும் ஹனுமான் பட இயக்குனர்! |
கடந்த வாரம் வெள்ளிக்கிழமை அன்று வெளியான படம் ராணி ருத்ரமா தேவி. ஆந்திரா, தெலுங்கானா மற்றும் சில வெளிநாடுகளிலும் இப்படம் வெளியாகி வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது. உலகம் முழுவதும் 2500 தியேட்டர்களில் வெளியான இப்படம் திரைக்கு வந்த முதல் நாளிலேயே 20 கோடி வரை வசூலித்து சில வசூல் மன்னர்களான ஆந்திர ஹீரோக்களை அதிர்ச்சியடைய செய்தது.
மேலும், பெரிதாக எதிர்பார்க்கப்பட்ட இப்படத்திற்கு ஆரம்பத்தில் சில தினங்கள் எதிர்பார்த்த ஓப்பனிங் கிடைக்காத நிலையில், தற்போது பாகுபலிக்கு இணையான வசூலை குவித்துக்கொண்டிருக்கிறதாம். அதோடு ராணி ருத்ரமா தேவி படத்தைப்பார்த்த திரையுலக பிரபலங்களும் அப்படத்தை மனம் போல் பாராட்டி வருகின்றனர். அதனால் வருகிற 16-ந்தேதி தமிழகத்தில் ரிலீசாகும் அப்படத்துக்கு நல்லதொரு ஓப்பனிங் இருக்கும் என்று எதிர்பார்க்கிறார்கள்.
அதோடு, இதுவரை அனுஷ்கா நடித்த படங்களுக்கு வெளிநாடுகளில் கிடைக்காத வரவேற்பு இந்த படத்திற்கும் கிடைத்திருக்கிறாம். குறிப்பாக, அமெரிக்காவில் ஐந்தே நாட்களில் ஐந்து கோடி வரை அப்படம் வசூலித்திருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேசமயம், விஜய் நடிப்பில் அமெரிக்காவில் வெளியான புலி படம் பத்து நாட்களில் 1.40 கோடி மட்டுமே வசூலித்தது. இந்த சேதி விஜய் வட்டாரத்தை சற்றே அதிர வைத்துள்ளதாம்.