ஜல்லிக்கட்டு பின்னணியில் உருவாகும் 'நின்னு விளையாடு' | பின்னணி இசை இல்லாத படம் | பிளாஷ்பேக் : திரையில் காமெடி நடிகை, நிஜத்தில் ஹீரோயின் | சுந்தரா டிராவல்ஸ் ராதா மீது போலீசில் புகார் | சமையல் நிகழ்ச்சியில் வடிவேலு? | புது தொடரில் கமிட்டான சல்மா அருண் | பிரம்மாண்டமாக நடந்து முடிந்த ஜீ தமிழ் கோல்டன் அவார்ட்ஸ் விருது விழா - எப்போது ஒளிபரப்பு | ரீ-ரிலீஸில் சாதனை படைத்த 'கில்லி' | 'ராயன்' படத்திற்கு முன்பு 'குபேரா' டீசர்' | கோடை விடுமுறை வெளியீடுகள் ஆரம்பம் : மே 3ல் 5 படங்கள் ரிலீஸ் |
விஜய்யுடன் நடித்த ஜில்லாவுக்கு பிறகு அதிரடியாக சம்பளத்தை உயர்த்தி படங்களே இல்லாத நிலைக்கு தள்ளப்பட்ட காஜல் அகர்வால், பின்னர் சம்பளத்தை கணிசமான அளவு குறைத்து மாரி, பாயும் புலி போன்ற படங்களை கைப்பற்றினார். ஆனால் அந்த இரண்டு படங்களுமே அவருக்கு பெரிதாக பெயர் வாங்கிக்கொடுக்கவில்லை. அதோடு படங்களும் வசூலில் மந்தமாகி விட்டதால், வெற்றிப்பட நாயகி என்கிற பட்டியலில் இருந்து காஜலை நீக்கி விட்டனர் தயாரிப்பாளர்கள்.
இந்த நிலையிலும் தற்போது விக்ரமின் மர்ம மனிதன் மற்றும் பிரமோற்சவம் என ஏற்கனவே கமிட்டான சில படங்களில் நடித்து வருகிறார் காஜல்அகர்வால். இதற்கடுத்து தமிழ், தெலுங்கில் ஒரு நிலையான இடத்தை எப்படியாவது பிடித்து விட வேண்டும் என்று திரைக்குப்பின்னால் படுதீவிரம் காட்டினார். ஆனால், இவரது அபிமானிகளின் படங்கள்கூட சமந்தா பக்கம் திரும்பி விட்டன. இதனால் கடும் அதிர்ச்சியில் இருக்கிறார் காஜல்.
மேலும், தென்னிந்திய சினிமாவில் தான் நடித்த படங்களும் சமீபகாலமாக வெற்றி பெறாததோடு போட்டி நடிகைகளின் ஆதிக்கம் அதிகரித்து விட்டதால், தாய்மொழியான இந்தியில் முன்பை விட கூடுதல் கவனத்தை திருப்பியிருக்கிறாராம் காஜல்அகர்வால்.