ஒரே நேரத்தில் இரண்டு படங்களில் நடிக்கும் அஜித் குமார்! | சமுத்திரகனிக்கு பெரிய மனது: நெகிழ்ந்த பாலா | ராகவா லாரன்ஸின் ‛மாற்றம்' அமைப்பில் இணைந்த எஸ்.ஜே.சூர்யா! | விஜய் - அஜித்தை தொடர்ந்து விஜய் சேதுபதி படங்களும் ரீ ரிலீஸ் ஆகிறது! | பாடல் இல்லாத படத்துக்கு இசையமைக்கும் அனிருத்! | மகாதேவ் சூதாட்ட செயலி வழக்கு: நடிகர் சாஹில் கான் கைது | விஜயகாந்த்க்கு மே 9ல் பத்ம பூஷன் விருது: பிரேமலதா தகவல் | முத்தக்காட்சிகளால் படங்களை இழந்தேன்: மிருணாள் தாக்கூர் | ஹிந்திக்கு செல்லும் தில் ராஜூ! | ரன்வீர் சிங்கை இயக்கும் ஹனுமான் பட இயக்குனர்! |
தென்னகத்து லேடி சூப்பர் ஸ்டார் அனுஷ்கா நடித்துள்ள ருத்ரமாதேவி நாளை(அக்.9 - தெலுங்கில்) வெளியாகிறது. குணசேகரன் இயக்கி உள்ள இந்தப் படத்தில் ராணா, அல்லு அர்ஜுன், காஜல் அகர்வால், கேத்ரின் தெரசா, அதிதி செங்கப்பா உள்பட பலர் நடித்திருக்கிறார்கள். ஆந்திராவின் காக்கத்தியா சாம்ராஜ்யத்தை ஆண்ட ராணியின் சரித்திர கதை. சுமார் 75 கோடியில் உருவாகியிருக்கும் இந்தப் படத்தில் அனுஷ்கா ருத்ரமாதேவியாக நடித்துள்ளார். நாளை உலகம் முழுவதும் வெளிவந்தாலும் தமிழில் வருகிற 16ந் தேதிதான் வெளிவருகிறது.
கடுமையாக உழைத்துள்ள ருத்ரமாதேவி படம் வெற்றிபெற வேண்டும் என்பதற்காக நடிகை அனுஷ்கா நேற்று திருப்பதி சென்று ஏழுமலையானை வழிபட்டார். அவருடன் படத்தின் இயக்குனர் குணசேகர் உள்ளிட்ட படக்குழுவினரும் சென்றனர். படத்தின் முதல் பிரதியை (கியூப் டிஷ்க்) ஏழுமலையானின் பாதத்தில் வைத்து பூஜை செய்தனர். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அனுஷ்கா "எல்லோருடைய கடின உழைப்பில் ருத்ரமாதேவி உருவாகி உள்ளது. இதன் வெற்றியில் பலரின் வாழ்க்கை உள்ளது. அதனால் வெற்றி பெற வேண்டும் இறைவனிடம் பிரார்த்தனை செய்தோம்" என்றார்.