விஜய் - அஜித்தை தொடர்ந்து விஜய் சேதுபதி படங்களும் ரீ ரிலீஸ் ஆகிறது! | பாடல் இல்லாத படத்துக்கு இசையமைக்கும் அனிருத்! | மகாதேவ் சூதாட்ட செயலி வழக்கு: நடிகர் சாஹில் கான் கைது | விஜயகாந்த்க்கு மே 9ல் பத்ம பூஷன் விருது: பிரேமலதா தகவல் | முத்தக்காட்சிகளால் படங்களை இழந்தேன்: மிருணாள் தாக்கூர் | ஹிந்திக்கு செல்லும் தில் ராஜூ! | ரன்வீர் சிங்கை இயக்கும் ஹனுமான் பட இயக்குனர்! | மே 1ம் தேதி ரீ ரிலீஸாகும் தீனா படம்! | கவின், ஆண்ட்ரியா படத்திற்கு இசையமைக்கும் ஜி.வி. பிரகாஷ்! | ஹாலிவுட்டில் ரீ ரிலீசாகிறது 'இன்டர்ஸ்டெல்லர்' |
ஜி.வி.பிரகாஷ்குமார் நாயகனாக நடித்து இரண்டாவதாக வெளிவந்த 'த்ரிஷா இல்லனா நயன்தாரா' படம் கடுமையான விமர்சனங்களைச் சந்தித்தாலும் வசூலில் படத்தை வாங்கியவர்களுக்கு அதிக லாபத்தைச் சம்பாதித்துக் கொடுத்துள்ளது. இளைஞர்களுக்காகவே எடுக்கப்பட்ட இளைஞர்களைப் பற்றிய படம் என்று சொல்லப்பட்டாலும் படம் வெளிவந்த பின் இவ்வளவு ஆபாசமாகவா ஒரு படத்தை எடுப்பது என்று பல திசைகளிலிருந்தும் இயக்குனருக்கு விமர்சனங்கள் பறந்தன. நல்ல பெயரை வாங்கி வைத்துள்ள ஜி.வி.பிரகாஷ் இப்படிப்பட்ட படத்தில் நடித்து அவருடைய இமேஜைக் கெடுத்துக் கொண்டாரே என்றும் சொல்லப்பட்டது.
'த்ரிஷா இல்லனா நயன்தாரா' ஓடும் தியேட்டர்கள் பக்கம் குடும்பத்தினர் யாருமே தலை காட்டவேயில்லை. அதே போலவே ஜி.வி.பிரகாஷும் அவருடைய குடும்பத்தினர் யாருக்கும் படத்தைக் காட்டவில்லையாம். குறிப்பாக அவருடைய மனைவியான பின்னணிப் பாடகி சைந்தவி இதுவரை படத்தைப் பார்க்கவில்லை என்கிறார்கள். இது பற்றி ஜிவியே சமீபத்திய பேட்டி ஒன்றில் தெரிவித்திருக்கிறார்.
அதோடு அவருடைய தாய் மாமாவான ஏ.ஆர்.ரகுமானைப் படம் பார்க்க அழைத்ததாகவும், படம் பற்றி நான் கேள்விப்பட்டேன், வேறு ஏதாவது நல்ல படத்தில் கூப்பிடு வந்து பார்க்கிறேன் என அவர் சொன்னதாகவும் தகவல்கள் வெளியாகின.
தான் நடித்த படத்தையே தன் குடும்பத்தைச் சேர்ந்தவர்களைப் பார்க்க வைக்க முடியாத அளவிற்கு ஒரு படத்தில் நடித்து விட்டோம் என ஜி.வி.பிரகாஷ்குமார் இனியாவது உணர்ந்தால் சரி.