ஒரே நேரத்தில் இரண்டு படங்களில் நடிக்கும் அஜித் குமார்! | சமுத்திரகனிக்கு பெரிய மனது: நெகிழ்ந்த பாலா | ராகவா லாரன்ஸின் ‛மாற்றம்' அமைப்பில் இணைந்த எஸ்.ஜே.சூர்யா! | விஜய் - அஜித்தை தொடர்ந்து விஜய் சேதுபதி படங்களும் ரீ ரிலீஸ் ஆகிறது! | பாடல் இல்லாத படத்துக்கு இசையமைக்கும் அனிருத்! | மகாதேவ் சூதாட்ட செயலி வழக்கு: நடிகர் சாஹில் கான் கைது | விஜயகாந்த்க்கு மே 9ல் பத்ம பூஷன் விருது: பிரேமலதா தகவல் | முத்தக்காட்சிகளால் படங்களை இழந்தேன்: மிருணாள் தாக்கூர் | ஹிந்திக்கு செல்லும் தில் ராஜூ! | ரன்வீர் சிங்கை இயக்கும் ஹனுமான் பட இயக்குனர்! |
காக்கி சட்டை படத்தை அடுத்து சிவகார்த்திகேயன் நடித்த ரஜினி முருகன் படம் வெளிவருவதற்கான வாய்ப்புகள் ஏறக்குறைய மங்கிவிட்டன. விஷால் நடித்த மதகஜராஜா படத்தைப் போல் ரஜினி முருகன் படமும் காலப்போக்கில் மறக்கடிக்கப்பட வாய்ப்பு இருக்கிறது. எனவே ரஜினி முருகன் படத்தை மறந்துவிட்டு தன் அடுத்தப் படத்தில் கவனம் செலுத்த ஆரம்பித்துவிட்டார் சிவகார்த்திகேயன். தன் நண்பரது பெயரில் பட நிறுவனம் தொடங்கி தானே தயாரிக்கும் அந்தப் படத்தில் கதாநாயகியாக நடிக்க ஸ்ருதிஹாசனை கமிட் பண்ணியிருந்தனர். சம்பளம் முடிவாகி, கால்ஷீட் முடிவாகி, அடுத்த மாதம் படப்பிடிப்பு தொடங்கவிருந்தநிலையில் கடைசிநேரத்தில் கால்ஷீட் இல்லை என்று சொல்லி பின்வாங்கிவிட்டார் ஸ்ருதிஹாசன்.
படப்பிடிப்பு தொடங்க முழுசாக ஒரு மாதம் கூட இல்லை. எனவே யாரை கதாநாயகியாக அணுகுவது என்று தெரியாமல் திகைத்துப்போன சிவகார்த்திகேயன் தன்னுடன் ஏற்கனவே ஜோடியாக நடித்துள்ள ஸ்ரீதிவ்யா, கீர்த்தி சுரேஷ் இருவரையும் அப்ரோச் செய்ய முடிவு செய்தார். இருவரில் யார் பெஸ்ட் என்று குழப்பம் அடைந்தநிலையில் படத்தின் ஒளிப்பதிவாளராக பி.சி.ஸ்ரீராமிடம் கருத்து கேட்டனராம். படத்தில் கதாநாயகிகளின் கேரக்டர், மற்றும் அவர்களுடைய ஸ்கின் கலர் ஆகியவற்றின் அடிப்படையில் ஸ்ரீதிவ்யாவைவிட கீர்த்தி சுரேஷ் பெட்டர் என்று சொன்னாராம் பி.சி.ஸ்ரீராம். அதன் பிறகே கீர்த்திசுரேஷை கமிட் உள்ளனர்.