ஒரே நேரத்தில் இரண்டு படங்களில் நடிக்கும் அஜித் குமார்! | சமுத்திரகனிக்கு பெரிய மனது: நெகிழ்ந்த பாலா | ராகவா லாரன்ஸின் ‛மாற்றம்' அமைப்பில் இணைந்த எஸ்.ஜே.சூர்யா! | விஜய் - அஜித்தை தொடர்ந்து விஜய் சேதுபதி படங்களும் ரீ ரிலீஸ் ஆகிறது! | பாடல் இல்லாத படத்துக்கு இசையமைக்கும் அனிருத்! | மகாதேவ் சூதாட்ட செயலி வழக்கு: நடிகர் சாஹில் கான் கைது | விஜயகாந்த்க்கு மே 9ல் பத்ம பூஷன் விருது: பிரேமலதா தகவல் | முத்தக்காட்சிகளால் படங்களை இழந்தேன்: மிருணாள் தாக்கூர் | ஹிந்திக்கு செல்லும் தில் ராஜூ! | ரன்வீர் சிங்கை இயக்கும் ஹனுமான் பட இயக்குனர்! |
"சாகுற நாள் தெரிஞ்சு போச்சுன்னா வாழ்ற நாள் நரகமாயிடும்" என்பது ரஜினியின் தத்துவ வசனங்களில் முக்கியமானது. செல்போன் காலர் டியூனாக கூட இந்த வசனம் பிரபலம். தற்போது இந்த தத்துவத்தை மையாக கொண்டு வி என்கிற ஒரு படம் தயாராகிக் கொண்டிருக்கிறது.
ட்ரூசோல் பிக்சர்ஸ் சார்பில் ரூபேஸ் குமார் தயாரிக்கும் இந்தப் படத்தில் வி.ராகவ், சத்யதாஸ், ரிஷி, திவ்வின், ரினீஷ், ருதியா, தேவசூர்யா, வில்ஜியா என்ற புதுமுகங்கள் நடிக்கிறார்கள். அனில்குமார் ஒளிப்பதிவு செய்கிறார், இளங்கோ கலைவாணன் இசை அமைக்கிறார் டாவின்ஸி இயக்குகிறார்.
"நண்பர்கள் 5 பேர் தங்கள் காதலிகளுடன் விடுமுறையை கழிக்க பைக்கில் ஜாலியாக சுற்றுலா கிளம்புகிறார்கள். போகிற வழியில் ஒரு விபத்து நடக்க அருகில் உள்ள ஒரு தனிமையான பங்களாவில் தங்குகிறார்கள். அந்த பங்களாவில் உள்ள ஒரு அமானுஷ்ய சக்தி ஒவ்வொருவருக்கும் அவர்கள் சாகும் நாள், நேரத்தை சொல்கிறது. அதுவரை சந்தோஷமாக இருந்தவர்கள் தாங்கள் சாகும் நேரத்தை தெரிந்தவுடன் என்ன ஆகிறார்கள், எப்படி அதனை எதிர்கொள்கிறார்கள் என்பதுதான் கதை. ரஜினியின் தத்துவ வசனம்தான் படத்தின் மைய கரு. வாழும்போது மற்றவர்களை வாழவைத்து நாமும் சந்தோஷமாக வாழவேண்டும் என்கிற மெசேஜையும் சொல்கிறோம்" என்கிறார் இயக்குனர் டாவின்ஸி.