விஜய் - அஜித்தை தொடர்ந்து விஜய் சேதுபதி படங்களும் ரீ ரிலீஸ் ஆகிறது! | பாடல் இல்லாத படத்துக்கு இசையமைக்கும் அனிருத்! | மகாதேவ் சூதாட்ட செயலி வழக்கு: நடிகர் சாஹில் கான் கைது | விஜயகாந்த்க்கு மே 9ல் பத்ம பூஷன் விருது: பிரேமலதா தகவல் | முத்தக்காட்சிகளால் படங்களை இழந்தேன்: மிருணாள் தாக்கூர் | ஹிந்திக்கு செல்லும் தில் ராஜூ! | ரன்வீர் சிங்கை இயக்கும் ஹனுமான் பட இயக்குனர்! | மே 1ம் தேதி ரீ ரிலீஸாகும் தீனா படம்! | கவின், ஆண்ட்ரியா படத்திற்கு இசையமைக்கும் ஜி.வி. பிரகாஷ்! | ஹாலிவுட்டில் ரீ ரிலீசாகிறது 'இன்டர்ஸ்டெல்லர்' |
தென்னிந்திய நடிகர் சங்கத்திற்கு வருகிற 18ந் தேதி தேர்தல் நடக்கிறது. தற்போதுள்ள தலைவர் சரத்குமார், ராதாரவி மீது கடுமையான ஊழல் குற்றச்சாட்டுக்களை கூறி இளம் நடிகர்கள் விஷால் தலைமையில் தனி அணி அமைத்து போட்டியிட உள்ளனர். இரு அணியினரும் தவீரமாக ஓட்டுசேகரிப்பிலும், ஈடுபட்டுள்ளனர். சரத்குமார் அணியில் சரத்குமார் தலைவர் பதவிக்கு போட்டியிடுகிறார். விஷால் அணி சார்பில் நாசர் போட்டியிடுகிறார். இவர்கள் தவிர இரு அணியினரின் மற்ற உறுப்பினர்களும் வேட்பு மனு தாக்கல் செய்துள்ளனர்.
இந்நிலையில் விஷால் அணியினரின் அறிமுக கூட்டம் சென்னை, ராகவேந்திரா திருமண மண்டபத்தில் நடைபெற்றது. கூட்டத்தில் விஷால் அணியினர் அறிமுகம் செய்து வைக்கப்பட்டனர்.
கூட்டத்தில் பேசிய நடிகர் வடிவேலு... இங்கே நாம் அனைவரும் கலை உணர்வுடன், ஒரு சுப காரியத்திற்காக இங்கு கூடியுள்ளோம். நான் எத்தனையோ படங்களில் காமெடி செய்திருக்கிறேன். அதில் ஒரு படத்தில், அய்யா என் கிணற காணோம் என்று காமெடி செய்வேன். அதேப்போன்று இப்போது நமக்கு சொந்தமான ஒருவீடு நடிகர் சங்கம், அந்த நடிகர் சங்கம் இப்போது காணாமல் போய்விட்டது. அதை நாம் எல்லோரும் ஒன்று சேர்ந்து கண்டுபிடிக்க வேண்டும்.
இப்போது இருக்கும் நடிகர் சங்க உறுப்பினர்களிடம் கேள்வி கேட்டால் நோட்டீஸ் அனுப்பி அவதூறு பரப்புகிறார்கள். அந்த அணியில் இருப்பவர்கள் எல்லாம் இந்த அணிக்கு வந்துவிடுங்கள், நிச்சயமாக இந்த அணி ஜெயிக்கும் என்றார்.